“என்ன?” என்று வினவினாள் மஞ்சு.
“சாதனாக்கு பார்த்திருந்த அலையன்ஸ் நான் தான்னு ஜோதி நினைச்சாளாம்... அதனால தான் என் ஹீரோயின் அப்படி செய்தா...”
“ஒ...!!! இந்த மாதிரி கோல்மால் செய்றவங்களுக்கு எங்க ஊர்ல வேற பேர் இருக்கு...”
“என்ன வில்லின்னு சொல்றீயா?? பட் இதை நேரடியா என் கிட்ட சொல்ல ஜோதிக்கு எவ்வளவு தைரியம் வேணும் மஞ்சு... அதுக்கு நீ அவளை பாராட்டி தான் ஆகனும்... என் கிட்ட எதையும் மறைக்க விரும்பலைன்னு எல்லாத்தையும் சொன்னா... அன்னைக்கு, நீ அவ எனக்கு சரியான ஜோடியா இருப்பேன்னு சொன்னதும் அவளுக்கு ரொம்ப குற்ற உணர்ச்சி வந்ததாம்... அதும் அத்தை வேற நான் உன்னை நல்லா வளர்திருக்கேனான்னு நீ தான் இதுக்கு மேல ப்ரூவ் செய்யனும்னு அவக் கிட்ட சொல்லவும்... மேடம் அன்னைக்கே உனக்கு சாமரம் வீச ரெடி ஆயிட்டாங்க...”
“இதெல்லாம் எனக்கே தெரியும், கார்த்திக்... இப்போ எதுக்கு இந்த பேச்செல்லாம்??? நீ மாப்பிள்ளையா போய் மத்தவங்க கிட்ட பேசு...”
“போறேன்... அதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயம்... சாதனா விஷயத்துல உனக்கு ஜோதி மேல இன்னும் கோபம் இருக்கா, மஞ்சு? ஜோதி செஞ்சது தப்பு தான்... இப்போ அவ மாறிட்டா... நீயே கூட சொன்னீயே...”
“ஹலோ மிஸ்டர் கார்த்திக்! ஜோதி என் சிஸ்டர் இன் லா... நாங்க சண்டைப் போடுவோம், செல்லம் கொஞ்சிப்போம்... அதெல்லாம் உனக்கு எதுக்கு...?”
“விளையாடாதே மஞ்சு... நான் சீரியஸா சொல்றேன்...”
“எனக்கு அவ மேல பயங்கரமா கோபம் இருந்தது, கார்த்திக்! ஆனால் சது, அப்போ கல்யாணம் செய்துக்க இன்ட்ரஸ்ட் காட்டலை, ஜோதி செஞ்சது ஹெல்ப்ன்னு கூட சொன்னா... அம்மா அப்பா கூட சின்னப் பொண்ணு தெரியாம செய்துட்டான்னு விட்டுட்டாங்க... அதுக்கு எல்லாம்