நேரம் இறக்கைக் கட்டிக் கொண்டு பறக்க, விழா நல்ல விதமாக நிறைவுப் பெற்றது...
ஜோதி மணமகள் அறைக்கு திரும்ப, மஞ்சுவும், வினோதினியும் அவளுக்கு துணையாக உடன் வந்தார்கள்.
ரிசப்ஷன் பற்றி கதைப் பேசிக் கொண்டும், ஜோதியை கேலி செய்தும் நேரம் சென்றுக் கொண்டிருந்தது...
“அண்ணி, உங்களுக்காக நான் ஒரு கிப்ட் வாங்கி வச்சிருந்தேன்... கொடுக்கனும் கொடுக்கனும்ன்னு நினைச்சு மறந்தே போயிட்டேன்...” என்று ஜோதி மஞ்சுவிடம் சொல்லி, பெரிய பில்ட்-அப் கொடுக்கவும்... மஞ்சு அப்படி என்ன கிப்ட் என்று ஆர்வத்துடன் பார்த்தாள்...
ஜோதி தன் பையில் இருந்து சிறிய கார்ட்போர்ட் பெட்டி ஒன்றை எடுத்து, திறந்தாள்...
அதிலிருந்த குங்குமச் சிமிழை எடுத்து மஞ்சுவிடம் நீட்டினாள்...
“இது உங்களுக்ககான கிப்ட்... ஆனா, சின்ன அண்ணனுக்கு தான் முக்கியமா உதவும்... இதுல குங்குமம் எடுத்து வச்சு, குங்குமத்துக்கு மிளகாய் தூளுக்கும் இருக்க வித்தியாசத்தை சொல்லிக் கொடுங்க...”
வெட்கமும் சிரிப்பும் கலக்க குங்குமச் சிமிழை வாங்கிக் கொண்டாள் மஞ்சு...
ஜோதி அவளுக்காக பரிசு வாங்கியது, மற்றும் அவள் சொன்ன காரணம் என இரண்டுமே மஞ்சுவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது...
“இன்னுமா மனோஜுக்கு இதுல வித்தியாசம் தெரியலை???” என்றுக் கேட்டு மஞ்சுவை கிண்டல் செய்த வினோதினி, அப்படியே ஜோதியிடம்,
“குங்குமம், மிளகாய் தூள் எல்லாம் ஓல்ட் நியூஸ், ஜோதி... இன்னைக்கு வேற புது நியூஸ்