(Reading time: 10 - 20 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

மேல ஜோதியும் மாறிட்டா... அதுக்கு அப்புறமும் நான் எதுக்கு பழைய குப்பையை மனசுல போட்டு வச்சுக்க போறேன்...? இப்போ நானும் ஜோதியும் ரிலேடிவ்ஸ் மட்டும் கிடையாது. நல்ல பிரென்ட்ஸ். போதுமா...?”

  

“தேங்க்ஸ் மஞ்சு...”

  

“அப்படியே இன்னும் ஒன்னு ஞாபகம் வச்சுக்கோ... ஜோதி என் சிஸ்டர் இன் லா மட்டும் கிடையாது, ப்ரெண்டும் கூட... அவக் கிட்ட லொள்ளு வேலை செய்த... அவ்வளவு தான்...”

  

“நீ எவ்வளவு பெரிய ரவுடின்னு எனக்கு இவ்வளவு நாள் தெரியாது பாரு... தெரிஞ்சே உன் வீட்டு பொண்ணை லவ் செய்திருக்கேன், நான் எவ்வளவு பெரிய ஹீரோ...”

  

“வாயாடாம போய் எல்லோரையும் பார்த்து பேசு... எனக்கு நிறைய வேலை இருக்கு...” என்ற மஞ்சு அதற்கு மேல் அங்கே நிற்காமல் நிர்மலாவும், பத்மாவும் நின்றிருந்த இடம் நோக்கிச் சென்றாள்.

  

ஜோதி திருமணத்திற்காக அமெரிக்காவில் இருந்து கிளம்பியப் போது, இங்கே எந்த மாதிரியான வரவேற்பு இருக்கும் என்பது மஞ்சு எதிர்பார்த்தது தான்... அவள் நினைத்துப் போலவே நிர்மலா பட்டும் படாமலும் தான் மஞ்சுவிடம் பேசினாள்... ஆனால் ஜோதி நடந்துக் கொண்ட விதம், மஞ்சுவையே மொத்தமாக மாற்றி இருந்தது...!!!!

  

நிர்மலாவிற்கு மஞ்சு மீது வருத்தம் + கோபம் என்பதை உணர்ந்து, மஞ்சுவும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளாமல், அவளே நிர்மலாவிடம் சென்று பேசினாள்... வேலைகளில் உதவி செய்தாள்...

  

ஜோதி, வினோதினி தொடங்கி, மனோஜ், ஷண்முகம் என அனைவரின் சப்போர்ட்டும் மஞ்சுவிற்கு இருக்கவும், நிர்மலாவும் விரைவிலேயே இறங்கி வந்தாள்...

  

அதுவும் மஞ்சு விநோதினிக்குமாக சேர்த்து திருமண வேலைகளை தானே இழுத்து போட்டு செய்யவும், நிர்மலாவிற்கு மனம் குளிர்ந்துப் போனது...

  

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.