"அப்படியா சொல்ற?"
"வேறென்னங்க? இது போல ஒரு அழகான அமைதியான டூரிங் ஸ்பாட்டுக்கு வந்தா கொலைக்காரனுக்கு கூட மனசு மாறி போயிடும். உங்களுக்கு வேலையே இல்லாம போக போகுது பாருங்க"
ட்ரிங் ட்ரிங் ட்ரிங், என அந்த நேரம் சரியாக போன் அலறியது.
போனை எடுத்து "ஹலோ!" என்றாள் ஷாலினி.
அடுத்த முனையில் பேசியதை பொறுமையாக கவனித்தவள்,
"அப்பா உங்க ஸ்டேஷனில இருந்து பேசுறாங்க," என தென்றல்வாணனை அழைத்தாள்.
மகளிடமிருந்த ரீசிவரை வாங்கிய தேன்,
"ஹலோ, க்ரைம் பிரான்ச் ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் ஹியர்" என்றான் கம்பீரமாக.
"சார், நான் சப் இன்ஸ்பெக்டர் அபினவ் பேசுறேன்!"
"யெஸ், அபினவ்!"
"சார் இன்னைக்கு காலையிலே ஒரு மர்டர் நடந்திருக்கு."
"வாட்? எங்கே? யார் விக்டிம்?"
"அசோகவனம் அவின்யுவில் சார். இறந்திருப்பது ஒரு லேடி, பேரு இந்திரா."
"ஓ! நீங்க க்ரைம் சீன்ல இருக்கீங்களா?"