தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 03 - தேன்மொழி
கேஸ் ஃபைல் - 01 - குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...!
“அபினவ், இந்த வீட்டுல கேமரா இருக்கே, அதோட ஃபூட்டேஜ் வாங்குங்க. பக்கத்துல எங்கேயாவது வேற செக்யூரிட்டி கேமரா இருக்கான்னும் பாருங்க,” என சப் இன்ஸ்பெக்டர் அபினவிற்கு கட்டளையிட்டான் தென்றல்வாணன்.
“வீட்டுல இருக்க செக்யூரிட்டி கேமரா வொர்க் ஆகலையாம் சார். ஒன் வீக்கா வேலை செய்யாம தான் இருக்குன்னு முத்துக்குமார் சொன்னார். பக்கத்துல விசாரிக்கும் போது கேமரா பத்தியும் கேட்குறேன்,” என்றான் அபினவ்.
“ஓகே! வீட்டு கேமரால என்ன ஃபால்ட்டுன்னு பாருங்க. தானா வந்த ப்ராப்ளமா, யாராவது இன்ட்யூஸ் செய்ததான்னு கண்டுப்பிடிக்க முடியுதான்னு பாருங்க. முத்துக்குமார் ஆபீஸ் இங்கே இருந்து எவ்வளவு தூரம்?”
“ஒரு மணி நேரத்துக்குள்ளே இருக்கும் சார்!”
“முத்துக்குமார் சொன்ன டைமை வச்சு டூ அண்ட் ஃப்ரோல இருக்க ட்ராபிக் கேமராஸ்ல அவர் கார் இருக்கான்னு பாருங்க. ஜிபிஎஸ் ஆக்ட்டிப்வேட் செய்திருந்தா சேட்டிலைட் லிங்க் வச்சு லொகேஷன் கண்டுப்பிடிக்க முடியாதுன்னும் பாருங்க.”
அபினவ் தென்றல்வாணனை கேள்வி நிறைந்த கண்களுடன் பார்த்தான்.
“நீங்க முத்துக்குமாரை சந்தேகப் படுறீங்களா சார்?”
“எல்லோருமே என் சந்தேக லிஸ்ட்ல இருக்காங்க,” என பொதுப்படையாக சொல்லிவிட்டு நகர்ந்தான் தேன்.
அவன் கண் முன் இப்போதும் இறந்திருந்த பெண்ணின் உருவம் நின்றிருந்தது!
சம்மந்தமே இல்லாமல் சத்யாவின் நினைவு அவனுக்கு வந்தது!
தேன் மதியூருக்கு மாற்றல் ஆகி வர முக்கிய காரணமே சத்யா தான்! அவளைப் போல