“மஞ்சு, உனக்கு குங்குமச் சிமிழ் பிடிக்கும்னு ஜோதி சொன்னா!” என நிர்மலா தொடங்கவும், மஞ்சு ‘பே பே’ என விழித்துக் கொண்டு ஜோதியைப் பார்த்தாள்!
ஜோதியோ சிரிப்பை அடக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்!!!
மஞ்சுவின் முகம் நிறம் மாறினாலும், சிரிக்காமல் நிர்மலாவிடம் கவனத்தை திருப்பினாள்!
“இது என்னோடது, மஞ்சு. முன்னாடி உன் மாமா இருந்தப்போ வாங்கிக் கொடுத்தார். பத்திரமா வச்சிருந்தேன். இதை நான் வச்சிருக்கதை விட உன் கிட்ட இருந்தா தான் சரியா இருக்கும்!” என சொல்லி நிர்மலா கொடுத்த குங்குமச் சிமிழை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாள் மஞ்சு!
“தேங்க்ஸ் அத்தை.”
“அதனால என்னம்மா! ஆமாம், அதென்ன உனக்கு குங்குமச் சிமிழ் மேல அப்படி ஒரு ஆர்வம்?” என நிர்மலா கேட்கவும், ஜோதி இப்போது சிரிப்பை அடக்க இயலாமல் சத்தமாகவே சிரித்து விட்டாள்!
வினோதினியும் கூட சிரித்தாள்!
நிர்மலா அவர்கள் இருவரையும் புரியாமல் பார்த்தாள்!
“அம்மா, ஆர்வம் அண்ணிக்கு இல்லை! சின்ன அண்ணனுக்கு தான்! அவன் தான் எப்போவும் குங்குமச் சிமிழோடவே இருக்கான்! என்ன அண்ணி???” என்று சொல்லி ஜோதி மஞ்சுவை பார்த்து கண் சிமிட்டி சிரித்தாள்!
அந்த நாளின் நினைவில் மஞ்சுவிற்கு இப்போதும் சிரிப்பு வந்தது!!!
அதுப் போன்ற கலாட்டா, அரட்டைப் பேச்சு, சிரிப்பு, கேலிகளை அவள் ரொம்பவுமே மிஸ் செய்தாள்...