அவனின் அணைப்பில் இருந்துக் கொண்டே தூங்க முயற்சி செய்தாள்!!!!
ஆனால் அது என்னமோ அவளுக்கு தூக்கம் அத்தனை எளிதாக வந்து விடவில்லை!!!
நாட்கள் மாதங்களாக மாறி, அப்படியே மெல்ல நகன்று கொண்டிருந்தது!
மஞ்சுவும் தன் புது வாழ்விற்கு ஏற்றதுப் போல தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டாள்.
காலையிலேயே சமையல் வேலைகளை முடித்து, மனோஜை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விடுவாள்!
அதன் பின் அம்மா, அப்பா, சாதனா, அத்தை, வினோ என உறவினர்களுடன் பேசுவாள்.
அதற்கு பிறகு, அமுதாவிடம் பேசுவாள்!
மதியத்திற்கு மேல் டிவி பார்ப்பது, வீட்டை சுத்தப் படுத்துவது, அலங்காரப் படுத்துவது என்று எதையாவது செய்வாள்!
அன்றும் அப்படி ஷோ கேஸில் வைத்திருந்த பொருட்களை சுத்தப் படுத்தி அடுக்கிக் கொண்டிருந்தவள், அங்கே வரிசையாக அடுக்கி வைத்திருந்த குங்குமச் சிமிழ்களைப் பார்த்து புன்னகைத்தாள்!
கடைசியாக இருந்த சிமிழை கையில் எடுத்தவள், அதை நிர்மலா தன்னிடம் கொடுத்ததைப் பற்றி யோசித்தாள்!
ஜோதி திருமணம் முடிந்து, இந்தியாவில் இருந்து அமெரிக்கா திரும்ப ஏர்போர்ட் கிளம்புவதற்காக மஞ்சு மும்முரமாக ஆயத்தமாகி கொண்டிருந்தாள். வினோதினி, மற்றும் ஜோதியும் கூட அவளுக்கு கடைசி நிமிட பேக்கிங்கில் உதவிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிர்மலா அந்த குங்குமச் சிமிழுடன் வந்தாள்.