“நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க சார்! இந்திரா மேடம் சரியான நச் நச்சு டைப்பு. எல்லோர் கிட்டேயும் தப்பு கண்டுப்பிடிப்பாங்க. முத்துக்குமார் சார் அப்படி கிடையாது. அமைதியா தான் பேசுவார்.”
“அவங்களுக்குள்ளே அடிக்கடி சண்டை வருமா?”
“சண்டைன்னு சொல்ல முடியாது சார். மேடம் எப்போவும் நீங்க என் கிட்ட கேட்குற மாதிரி கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க.”
“யார் கிட்ட? முத்துக்குமார் கிட்டேயா?”
“ஆமாம் சார். அவரும் பொறுமையா பதில் சொல்வார்.”
“அப்போ அவங்களுக்குள்ளே சண்டையே வந்ததில்லை?”
“சண்டைன்னு நான் பார்த்தது கிடையாது சார். மேடம் கோபப் படுவாங்க, கேள்வி கேட்பாங்க. முத்து சார் அவரோட அப்பா, அம்மா கிட்டா பேசினால் மேடம்க்கு சுத்தமா பிடிக்காது. அன்னைக்கு முழுக்க திட்டிட்டே இருப்பாங்க.”
“ஏன் அப்படி?”
“அது எல்லாம் எனக்கு தெரியாது சார். நான் வேலைக்கு வந்தப்போவே இவங்க தனியா தான் இருந்தாங்க.”
“இந்திராக்கு வேற பிரென்ட்ஸ் யாராவது இருக்காங்களா?”
“அப்படி யாரும் வீட்டுக்கு வந்து நான் பார்த்தது கிடையாது சார். அவங்க அம்மா கிட்ட போன்ல பேசுவாங்க. மணிக் கணக்குல கூட பேசுவாங்க. சார் மட்டும் அவரோட அப்பா, அம்மா கிட்ட பேசினா அவங்களுக்கு பிடிக்காது!”