“வீட்டுல பணம், நகை இருக்குறது உனக்கும் தெரியும் தானே?”
“ஐயோ எனக்கு அதெல்லாம் தெரியாது சார். என் வேலை சமையல் செய்றது, பெருக்குறது, துடைக்குறது மட்டும் தான். பணம் நகை எதையும் மேடம் வெளியே வச்சிருந்தது கிடையாது!”
அந்த அளவிற்கு முன் ஜாக்கிரதையுடன் இருந்திருக்கிறாள்! அப்படி பட்ட இந்திரா எதற்காக அந்த விடிகாலை நேரத்தில் அவளாகவே கதவை திறந்தாள்???
தென்றல்வாணன் காந்தாவை அனுப்பி விட்டு, இது வரை சேகரித்த விபரங்களை வைத்து மனக்கணக்கு போட்டான்.
அதுவரை தனித் தனித் தகவல்களாக இருந்தவை, இப்போது கோர்வையாக, சீரான காட்சி ஓட்டமாக மாறியது.
இந்த கொலைக்கு காரணம் என்ன? பணம் நகையா, அல்லது, தொழில் முறை பகைமையா, அல்லது இந்திராவிற்கு மாமனார் மாமியாருடனான உறவில் இருக்கும் விரிசல் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?
தென்றல்வாணன் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான்.
தொடரும்...