"நோ நோ! அதை நான் பாங்க் லாக்கரில் வச்சுட்டேன்."
"ஓகே கூல்! இந்த கொலையை சுபேஷ் இதை செய்திருக்க முடியும்னு நீங்க நினைக்குறீங்களா?"
"சொல்லா தெரியலை இன்ஸ்பெக்டர்! ஆனால், அவர் அப்படி பட்ட ஆள் தான்."
"ம்ம்ம்... ஏன் உங்களுக்கு முதலிலேயே அவர் மேல சந்தேகம் வரலை?"
இதற்கு முத்துக்குமார் பதில் சொல்லும் முன் ரமணி கோபத்துடன் குறுக்கே பேசினார்.
"இது என்ன கேள்வி இன்ஸ்பெக்டர்? குற்றவாளியை கண்டுப்பிடிக்க வேண்டியது உங்க கடமை, முத்துவுடையதில்லை. மத்தபடியும் மனைவியை பிணமா பார்த்து அவன் அவளுக்காக அழுவானா, யார் கொலை செய்திருப்பான்னு உட்கார்ந்து துப்பறிவானா?"
"யூ ஆர் ரைட் மிஸ்டர் ரமணி! கண்டுப்பிடிக்குறது எங்க வேலை தான். நாங்க மிஸ்டர் சுபேஷ் கிட்ட விசாரிச்சிட்டோம். அவரை இந்த குற்றத்துல தொடர்பு படுத்துறதா இதுவரைக்கும் எந்த தடயமும் கிடைக்கலை. சுபேஷ் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை உங்களுக்கு தெரிவிக்க சொன்னார். தொழில் போட்டிக்காக கொலை செய்யும் அளவுக்கு கீழே போகமாட்டேன்னு அவர் சொல்றார்!"
"சார், நீங்க நிஜமாகவே போலீஸ் தானா? எந்த கொலைகாரனாவது நான் தான் கொலை செஞ்சேன்னு சொல்வானா என்ன?" என மீண்டும் கோபத்துடன் நடுவில் பேசினார் ரமணி.
"அப்பா, அமைதியா இருங்க!” என அவரை தடுத்த முத்துகுமார், தேனிடம்,
“இன்ஸ்பெக்டர், வீடு இருந்த நிலையை பார்த்து எனக்கு யாரோ திருட முயற்சி செய்ததா தான் தோணிச்சு. இப்போ யோசித்தால் எதை திருடன்னு சந்தேகமா இருக்கு..." என்றான்.
"ஓகே மிஸ்டர் முத்துக்குமார்! ஆனால் நீங்க சொன்ன வீடு இருந்த நிலைமை தான் எனக்கு