****************
"என்னால இன்னும் நம்பவே முடியலை தேன். நீயா ஒரு கேஸை எடுத்து நடத்த மாட்டேன்னு சொன்ன?" என தன் அருகே நடந்துக் கொண்டிருந்த நண்பனிண்டம் கேட்டான் வினோதன்.
"விடு வினோதன்! என்னை விட நீ நல்லா இன்வெஸ்டிகேட் செய்வ! சீக்கிரமா முடிச்சிடு!" என்றான் தென்றல்வாணன் அதிக அக்கறை காட்டாமல்!
"எப்போ இருந்து உனக்கு இந்த பயம் வந்துச்சுடா? எனக்கு தெரிஞ்ச தேன் பயத்தையே பயமுறுத்துறவன்!!"
"இப்போவும் அப்படியே தான் இருக்கேன், வினோதன். ஆனால் இதுல மிரட்டல் வந்தது எனக்கில்லை!"
"என்னடா சொல்ற?"
“உனக்கு தெரியாதது இல்லை, சத்யா என்னை நம்பி எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்தவ. அவளுக்கு ஆடம்பரமான வாழ்க்கையை கொடுக்குறேனோ இல்லையோ அமைதியான வாழ்க்கையை கொடுக்க விரும்புறேன்."
"டேய் என்னடா பேசுற? மிரட்டல் எல்லாம் நமக்கு புதுசா?"
"இல்லை வினோதன்! இந்த ஒரு கேஸ் விஷயத்துல மட்டும் என்னை கட்டாயப் படுத்தாதே. உனக்கு எல்லா ஹெல்ப்பும் செய்றேன். ஆனால் நீயே எடுத்து நடத்து!"
"போடா!"
நண்பர்கள் இருவரும் மேலும் விவாதித்தபடியே ஜீப்பில் ஏறி மதியூர் ஸ்டேஷன் நோக்கி கிளம்பினார்கள்.
தொடரும்...