“சுச்சிக்கு முக்கியமான வேலை இருப்பதால் அவங்க வரலை, உங்க எல்லோருக்கும் ஃப்ரை டே ஓகேவா?”
கல்பனாவை கவனித்தப் படியே கேட்டான் சுமன்.
அவன் சொன்னதை கேட்டு அவனைப் பார்த்த கல்பனா, பின் மற்றவர்களை பார்த்தாள்.
“சுச்சி மேமும் இல்லை, கல்ப்ஸ் அக்காவும் இல்லையா? ரொம்ப போர் அடிக்குமே, கல்ப்ஸ் நீங்களாவது வாங்களேன்...” என்று துர்கா கெஞ்ச, கிரேஸும்,
“ஆமாம் கல்ப்ஸ் அக்கா, வாங்க....” என்று வற்புறுத்தினாள்.
“ம்ம்ம்.... ரொம்ப நேரம் இருக்க முடியாது.... நீங்க சீக்கிரம் வந்துருவீங்கன்னா வரேன்....” என்றாள் கல்பனா.
“போயிட்டு அடுத்த செகன்ட் திரும்பிடலாம் கல்ப்ஸ், அப்போ ஓகேவா?”
துர்காவின் நக்கலை கேட்டு புன்னகைத்தப் படி,
“சத்யம் காம்ப்ளக்ஸ்ல இருக்க பவ்லிங் அளி பக்கத்துல இருக்க ரெஸ்டாரன்ட் போவோம்.... கொஞ்சம் நேரம் நீங்க எல்லாம் பிடிச்சிருந்தா பவுலிங்கும் ட்ரை செய்யலாம்....” என்றான் சுமன்.
“நல்ல ஐடியா, சுமன் சார்....”
அனைவரும் ஏற்றுக் கொள்ள, எத்தனை மணிக்கு கிளம்புவது, எப்படி செல்வது என்றெல்லாம் அனைவருமாக சேர்ந்து திட்டமிட்டார்கள்....
***************
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.