ஷிவா ஸ்கார்பியோவை ஒட்டிக் கொண்டிருந்தான். அவன் அருகில் இருந்த சீட்டில் அமர்ந்திருந்த அருந்ததியின் பார்வை அவன் மீது அவ்வப்போது பட்டு செல்வதை உணர்ந்த போதும் கண்டுக்கொள்ளாமல் இருந்த ஷிவா, அவள் மீண்டும் அவன் பக்கம் பார்க்கவும் அவள் பக்கம் பார்த்து புன்னகைத்தான்.
"என்ன அப்பப்போ அப்படி ஒரு ஆச்சர்ய பார்வை பாக்குற?"
"இந்த வண்டி எவ்வளவு பெரிசா இருக்கு! எப்படி இவ்வளவு ஈசியா அதை கட்டுபடுத்தி ஓட்டுறீங்க!"
ஷிவாவிற்கு அருந்ததியின் தயக்கம் பற்றி இப்போது தெரிந்திருந்ததால், பைக்கை எடுத்து வராமல் மஹிந்திரா ஸ்கார்பியோவை எடுத்து வந்திருந்தான்.
"எனக்கு டிரைவிங் ரொம்ப பிடிக்கும், ரதி. இந்த வண்டி என்ன, எவ்வளவு பெரிய வண்டியா இருந்தாலும் கன்ட்ரோல் செய்வதெல்லாம் ஜுஜுபி!"
"ஓ!"
அப்பாவித்தனம் மிளிர அவள் சொன்ன அழகில் மயங்கிய ஷிவா, மேலும் ஒரு சில வினாடிகள் அவளை பார்த்து விட்டே ரோட்டின் பக்கம் கண்களை திருப்பினான்.
அன்பு என்பது குறைகளை மறக்கடிக்க வைக்கும் தன்மை கொண்டது!
ரோஜாவை ரசிக்கும் கண்கள் அதை சுற்றி இருக்கும் முட்களை கண்டுக்கொள்வதில்லை. அதே போல் முதல் பார்வையிலேயே தன்னை அருந்ததியிடம் இழந்திருந்த ஷிவாவிற்கு அவளிடம் இருந்த எதுவுமே குறையாக படவில்லை!
அவளுக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்ளவே அவன் விரும்பினான்.
**********
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.