அவளின் கேள்வியை கேட்டு புன்னகைத்த விவேக்,
"ப்ச்... இல்லை... உங்களைப் பார்த்து வேற விஷயம் பேச தான் வந்தேன்... சாரி... சொல்லிட்டு வந்திருக்கனும்..." என்றான்.
"அது பரவாயில்லை... ஆனால் எதைப் பத்தி பேசனும்?"
"ஹ்ம்ம்ம்... கொஞ்சம் பர்சனல் விஷயம்... உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னா என்னோட வெளியே வர முடியுமா? பக்கத்தில ஏதாவது காஃபி ஷாப், இல்லை பார்க் ஏதாவது இருந்தால் அங்கே உட்கார்ந்து பேசலாம்..."
பாரதி விவேக்கை கேள்வியோடு பார்க்கவும்,
"கோவில் இருந்தால் கூட பரவாயில்லை... கொஞ்சம் அமைதியா பேச கூடிய எந்த இடமா இருந்தாலும் பரவாயில்லை..." என்றான் விவேக்.
"அவ்வளவு தானே சார்... அதுக்கு எதுக்கு எங்கே எல்லாமோ அலையனும்? எங்க ஹாஸ்டல் முன்னே இருக்க மரத்துக்கு அடியில இருக்கிற பெஞ்சிலேயே உட்கார்ந்து பேசலாமே..."
"சரி... ஓகே..."
"ஹ்ம்ம்ம்ம்... நீங்க அங்கே போய் இருக்கீங்களா? நான் ஒரு ரெண்டு நிமிஷத்தில வரேன்...” என்ற பாரதி, தொடர்ந்து, “இப்படி தலையை விரிச்சு போட்டுட்டு காளி ஆத்தா மாதிரி வந்தா நல்லா இருக்காது தானே..." என்று விவேக் கேட்கும் முன்பே காரணத்தையும் சொல்லி விட்டு மாடி ஏறிச் சென்றாள்.
புன்னகை மின்னும் முகத்துடன் ஹாஸ்டல் முன்பு இருந்த பெஞ்சில் அமர்ந்த விவேக், பாரதி வரும் வரை அதே புன்னகையோடு தான் இருந்தான். அவன் அமர்ந்திருந்த அதே பெஞ்சில் சிறு இடைவெளி விட்டு அமர்ந்த பாரதி,