அடுத்த நாள் மானசியும், மாதவன் நாயரும் தீவை சுற்றிப் பார்க்க சென்றார்கள்.
முழு தீவையும் சுற்றிப்பார்த்த மானசி அதிசயித்துப் போனாள்!
"எந்த நாயரே இத்தனை பெரிய தீவு ஞான் கண்டிடில்ல!"
"எண்ட மானசி இனி நீதான் எல்லாம் கானணும்!"
அவள் சிரித்துக் கொண்டாள்.
மாதவன் நாயரும், அவன் கையை மானசியின் தோளில் போட்டு அவளை அணைத்துக் கொண்டான்.
"மானசி ஞான் இன்னும் கொஞ்ச நாள் இங்கே தான் இருக்கும், உனக்கு எல்லாம் படிப்பித்து தரும் ஞான்."
இரண்டு வருடங்களில் அந்த தீவில் பெரிய ஹோட்டல்களும், மால்களும் விளையாட்டு கேளிக்கைகளும் வெளிநாடுகளில் இருப்பது போல் நன்றாக கட்டியிருந்தான் மாதவன் நாயர்
மானசா தீவு பிரபலமாகிக் கொண்டு இருந்தது நிறைய மக்கள் அங்கு கூடி கேளிக்கைகளில் சந்தோஷமாக அனுபவித்தனர். மேலும் வெளிநாட்டில் இருந்து மக்கள் வந்து போய்க் கொண்டிருந்த சுற்றுலாத்தளமாக ,மிகவும் பிரபலமாகிவிட்டது.
அவ்வப்போது மானசா வெளியே சென்று மேற்பார்வை செய்வது வழக்கம் ஆயிற்று. அப்போது தங்கள் அக்ரஹாரத்தில் இருக்கும் மாமி தன் குடும்பத்துடன் அங்கு வந்திருந்தார் மானசாவை பார்த்தவுடன்,
"அடி மானசா இந்த தீவு உன் பேர்ல இருக்கிறதுன்னு எப்பவுமே நான் நினைச்சுப்பேன் ஆனா இப்போ இங்கே உன்னை கண்டுட்டேன். அடி நீ உன் ஆத்துக்காரரோட இங்க வந்திருக்கியா?"
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
VJG