"அக்கா அம்மாகிட்ட ஒரு நிமிஷம் போன் குடு நான் பேசணும்."
" இதோ," என்று அவள் அம்மாவிடம் போனை கொடுத்தாள்.
மகன் குரலை கேட்டவுடன், அம்மா அழ ஆரம்பித்து விட்டார். எப்படியோ அவன் சமாதானப்படுத்தி, மானசா அவள் அம்மாவை தேற்றி ஒருவழியாக அழுகையை குறைத்தாள்.
அம்மாவும், கார்த்திக்கிடம் பேசி முடித்த பின் மானசாவிடம் மனம் விட்டுப் பேசினார்.
"என்னடி மானசி எப்படி ஆக்கம் இருக்காய்? உன்ன பத்தி ரொம்ப கவலையாக இருந்தேன். கடவுள்கிடட தெனம் வேண்டிண்டு இருந்தேன் . உன்ன பத்தி ஒரு விவரமும் தெரியவில்லை?"
" என்ன பத்தி ஒன்னும் இல்ல அம்மா, நான் நல்லாதானிருக்கேன். ஒரு பிராபலம் இல்லை. என்னை அவர் நல்லா பார்த்துக்கிறார்."
".அதுதான் தெரிகிறதே உனக்காக எவ்வளவு தூரம் வந்திருக்கிறார் ,எத்தனை பேசியிருப்பார் உன் அச்சன்,அப்படியும் உன் ஆத்துக்காரர் வந்திருக்கிறார்."
"அம்மா என்ன பத்தி எந்த கவலையும் வேண்டாம், நான் நல்லா இருக்கேன்."
"சரி உனக்கு எத்தனை குட்டிகள்டி?"
அவள் சிரித்துக்கொண்டே, "எனக்கு அஞ்சு குட்டிகள் இதோ வயத்தைத் தொட்டு காட்டி “ இங்கே இன்னொன்று உண்டு" வெட்கத்தோடு கூறினாள்.
"எப்படி அடி இத்தனை குட்டிகளை சமாளிக்கிறாய்? உன் உடம்பு என்னத்துக்கு ஆகும்? அதுமட்டுமில்லை எத்தனை செலவாகும்?"
"அதெல்லாம் ஒன்றும் இல்லை அம்மா, அவர் எல்லாத்துக்கும் ஆள் போட்டு இருக்கிறார், அவர்