(Reading time: 17 - 34 minutes)
Manasa Theevu
Manasa Theevu

அங்கு வீட்டுக்கு சென்றவுடன் மானசா, வீடு பார்த்து அவள் அம்மா பிரமித்து விட்டார் "எவ்வளவு பெரிய வீடுடி , அரண்மனை மாதிரி இருக்குதே குட்டிகளெல்லாம் எங்கடி?" என்று ஏதோ பேசிக் கொண்டே இருந்தார்.

  

குழந்தைகளின் அறைக்கு கூட்டிச் சென்று குழந்தைகளைக் காண்பித்தாள். முத குழந்தை சஹானா, ரெண்டாவது ஆனந்த்,மூன்றாவது கல்யாணி,நாலாவது  சாருகேஷ், அஞ்சாவது சங்கர்.

  

இதோ ஆறாவது இங்க இருக்கு" என்று தன் வயிற்றை தடவி காட்டினாள் "மானசா.

  

"மானசா உன்னை நினைச்சா பெருமையா இருக்குடி, ஒன்னு ரெண்டுக்கே நாங்க எல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணுவோம் அஞ்சு குழந்தைய பெத்துட்டு ஆராவது உண்டாகி, உனக்கு யாரும்  உதவிக்கு  கூட பெரியவா இல்லையே?"

  

எல்லாமே இங்கு வேலை செய்யற பாட்டிகள் எல்லா இருக்காங்க, அவ எல்லாம் எண்ட உறவு மாதிரிதான். " என்றாள், கண்கள் கலங்க.

  

"என்னை மன்னிச்சுக்கோடி மானசா, என்னால ஒரு பிரசவத்துக்கு கூட பார்த்துக்க முடியலை எல்லாம் உங்க அப்பாவால வந்தது."

  

"ஏய் அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, எல்லாம் நல்லபடியா தான் நடத்க்கிறது, நீ எதுக்கு கவலைப் படுற?"

  

"உங்க அப்பாகிட்ட சொல்லிட்டு இந்த  பிரசவத்தையாவது  நான் பார்க்கறேன் மானசா."

  

"சாரமில்லை அம்மே, நீ இங்கே வந்து என்னோடு இருந்து என் பிரசவத்துக்கு என்ன செய்யனுமோ செய்." குழந்தைகளோடு சிறிது நேரம் இருந்து கொஞ்சி விட்டு அவரை அவர் ரூமுக்கு கூட்டி சென்று விட்டு விட்டு வந்தாள் மானசா .

  

அடுத்த நாள் காலை மூவரும் கிளம்பி ஹாஸ்பிடல் சென்றார்கள். அங்கு கார்த்திக் வெளியே

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.