தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 07 - சசிரேகா
கண்ணன் கோதையைக் கண்டான், ஆனால் கோதை கண்ணனை காணவில்லை, கண்கள் மூடி படுத்திருந்தாள், ரமணியோ என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என நினைத்து பதறிக் கொண்டிருக்க கண்ணன் மட்டும் கோதையை ஆழமாக பார்த்தான், அவன் மனதில் இருந்த சந்தேகம் தீர்ந்தது
தனது குழந்தை ஒரு நல்ல தாயிடம் வளர்கிறது என நினைத்து நிம்மதியானான், அடுத்து அவனது பார்வை சென்ற இடம் கோதையின் வயிற்றுப்பகுதிதான், அவன் தவறான எண்ணத்தில் பார்க்கவில்லை, தனது குழந்தை அவ்விடம் உள்ளது என்ற ஆர்வத்தில் பார்த்தவன் மெல்ல தனது கையை எடுத்து அவளின் வயிற்றுப் பகுதியில் தடவ முயல ரமணி தடுத்தார்.
அவனோ கண்களால் கெஞ்சின
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ செஞ்ச நானே என் கையால அந்த பொண்ணுக்கு அபார்ஷன் செஞ்சிடுவேன்” என சொல்ல அதைக்கேட்டு துடித்துப் போனான் கண்ணன்
”வேணாம் வேணாம் அப்படி செய்யாதீங்க டாக்டர்” என கைகூப்பி கெஞ்சினான்