புரிய வேண்டாம் தானே?"
பாரதி இல்லை என தலை அசைத்தாள்.
"மதுவுக்கு அது என்னவோ உங்கள் மேலே ஒரு தனி பாசம் ஏற்பட்டிருக்கு.... அதனால் தான் அவளுக்கு பிடித்த உங்களையே திருமணம் செய்துக் கொள்ளலாமான்னு நினைத்தேன்...."
பாரதியின் கண்களில் தெரிந்த கேள்வியை புரிந்துக் கொண்டு,
"புரியுது பாரதி, இந்த காரணத்திற்காக கல்யாணம் செய்துக் கொள்ள சொல்வது சரி இல்லை தான்... ஆனால் அந்த பாலா விஷயத்தை நீங்கள் கையாண்ட விதம் எனக்குப் பிடித்திருந்தது... அவனுக்கு பணம் தான் முக்கியம் என்று தெரிந்த உடனே போடா ன்னு தூக்கி வீசினீர்கள் பாருங்க, அது ரொம்ப பிடிச்சிருந்தது..."
பாரதி எதுவும் சொல்லாது புன்னகைத்தாள்.
"இப்போ உங்களுக்கு நான் ஏன் அன்னைக்கு காலேஜில் அப்படி நடந்துக் கொண்டேன் என்பதும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்... மது விஷயம்ன்னு வந்தாலே நான் உடனே ப்ரோடக்ட்டிவ் மோட்’க்கு மாறிடுவேன்... சாரிங்க... "
"என்ன சார், திரும்ப பழைய புராணத்தை ஆரம்பிக்குறீங்க... அதை விடுங்க... ஆனாலும் மது ரொம்ப லக்கி சார்... உங்களை மாதிரி ஒரு நல்ல அண்ணன் அவளுக்கு கிடைச்சிருக்கிறாரே..."
"நீங்கள் அப்படி நினைப்பது என் அதிர்ஷ்டம் தான்..." என்றான் விவேக் விளையாட்டுத்தனம் நிறைந்த மெல்லிய கண் சிமிட்டலுடன்!
புன்னகையும், குறும்பும் மின்ன, அவன் இப்படி எல்லாம் செய்வதை எவ்வளவு மணி நேரம் பார்த்திருந்தாலும் அலுக்காது என்று பாரதிக்கு தோன்றியது. ஆனால் அதற்குள் அவள் மூளை மீண்டும் எச்சரிக்கை மணி அடித்தது. அவசரமாக முகத்தை திருப்பிக் கொண்டு,
"மதுவை பழைய மாதிரி மாற்ற கட்டாயம் முயற்சிக்கிறேன் சார்... அப்புறம் ஒரு விஷயம்...”