தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 05 - பிந்து வினோத்
05. என்னை மறந்தேன், என்னை மறந்தேன்... நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே...
"....என்னை கல்யாணம் செஞ்சுப்பீங்களா?" என்ற விவேக்கின் கேள்வியைக் கேட்டு பாரதி பெரிதாய் திடுக்கிட்டு எல்லாம் போகவில்லை, மாறாக சற்றே ஆச்சர்யத்தைக் காட்டினாள். ஆனாலும் அவள் உதடுகளில் ஒரு பெரிய புன்னகை உதயமாகி இருந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்த விவேக்,
"நான் விளையாட்டுக்கு எல்லாம் சொல்லலை பாரதி... ரொம்பவே சீரியஸா தான் கேட்கிறேன்... சொல்லுங்க...." என்றான்.
"உங்க கிட்ட இருந்து இந்த கேள்வியை எதிர்பார்க்கலை சார்...." என்றாள் பாரதி!
"இந்த சார் மோர் எல்லாம் வேண்டாம்... என்னை விவேக்குன்னு கூப்பிடுங்க...." என்றான் விவேக் இடைமறித்து.
அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு,
"இல்லை சார்... அப்படி எல்லாம் கூப்பிடுறது நல்லா இருக்காது... அதெல்லாம் சரி படாது...." என்றாள் பாரதி சற்றே கடினமாகி விட்ட குரலில்.
பாரதியின் குரலில் இருந்த மாறுதலையும் அதில் ஏற்பட்டிருந்த சற்றே ஒதுங்கும் மனோபாவத்தையும் புரிந்துக் கொண்ட விவேக்,
"சரி பாரதி, உங்களுக்கு பிடிக்கலைனா வேண்டாம்... நான் கட்டாயப் படுத்த மாட்டேன்.... ஆனால் என் கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே..." என்றான் மீண்டும் பட்டு போன்ற மிருதுவான குரலில்.
விவேக்கின் குரல் பாவத்தில் சற்றே தடுமாறி, அவனைப் பார்த்த பாரதி, அவனின் முக வசீகரத்தில் மேலும் தடுமாறினாள். விவேக்கின் முகத்தில் இருந்த புன்னகை தானாய்