(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

ஏன் அப்படி?” என்று புரியாமல் வினவினாள் பவித்ரா.

  

என்ன ஏன்?” என்று பதிலுக்கு கேள்வி கேட்டாள் பாரதி!

  

உனக்கு ஏன் போக பிடிக்கலை?”

  

ப்ச்... ஸ்பெஷலா காரணம் எல்லாம் இல்லை, பவி... பிடிக்கலை அவ்வளவு தான்...”

  

தோழியை சந்தேகத்துடன் பார்த்த பவித்ரா,

   

விவேக் இன்னைக்கு உன்கிட்ட பேசலைன்னு உனக்கு கோபமா?” எனக் கேட்டாள்.

  

ம்ம்ம்... கோபம்ன்னு இல்லை, பவி... கொஞ்சம் வருத்தம் தான். நீயே சொல், அவர் தானே என்கிட்டே வந்து ஃபர்ஸ்ட சண்டைப் போட்டது அப்புறம் ஹாஸ்டல் வந்து பேசியது எல்லாம்...” என்று இப்போதும் மனதில் இருந்ததை மறைக்காமல் ஒப்பித்தாள் பாரதி.

  

விவேக்குக்கு உன் கிட்டப் பேச தயக்கமா இருக்கலாம், பாரு...”

  

பாரதி கேள்வியாக நோக்கவும்...

  

விவேக் கல்யாணம் செஞ்சுப்பியான்னு கேட்டு, நீ மாட்டேன்னு ரிஜெக்ட் செஞ்சுட்ட... அதுக்கு அப்புறம் அவர் எப்படி உன் கிட்ட சாதாரணமா பேச முடியும்?”

  

ப்ச்... அவர் என்ன என் மேல் ஆசைப் பட்டா கேட்டார்? அவரோட தேவைக்கு கேட்டார். எனக்கு தேவை இல்லை... நான் வேண்டாம்னு சொன்னேன். இதில என்ன இருக்கு?”

  

பவித்ரா சற்றே ஆர்வத்துடன் பாரதியைப் பார்த்தாள்.

  

என்ன லுக் விடுற, பவி?” என்றாள் பாரதி.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.