தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 37 - நவ்யா
தர்மா விழித்த விழியைப் பார்த்து ஜனனி பயந்துப் போகவில்லை அதற்கு பதிலாக மனசுக்குள் சந்தோஷப்பட்டாள்.
இப்போ தான் தர்மா சரியா யோசிக்குறார். குட் ஜாப் ஜனனி! தனக்கு தானே வர்ச்சுவலாக சிலாகித்தும் கொண்டாள்.
இந்த குதூகலத்தை காண்பித்து கொள்ளாமல் நின்றதோடு, வாயையும் மூடிக் கொண்டு நின்றாள். தர்மாவே பேசட்டும் என்று ஆர்வத்தை கட்டுப்படுத்தி நின்றாள் ஜனனி.
ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசாமல் இருந்து, தர்மா ஜனனியை முழுமையாக சோதித்தான்!
முதல் சில வினாடிகள் ஜனனியை பார்த்து விழித்தவன் பிறகு சில வினாடிகள் மேஜை மேலே இருந்த செல்ஃபோனை எடுத்து குழந்தைகளின் பிரிக்ஸ் விளையாட்டை விளையாடுபவனைப
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஜனனி அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள்.
இறுதியாக “எதனால நாங்க பிரியுறது நல்லதுன்னு சொல்றீங்க ஜனனி?” என தர்மா கேட்டப் போது இதுக்கா இவ்வளவு நேரம் என்று தான் அவளுக்குத் தோன்றியது.
ஆனாலும், நீ என்ன சொல்வது என்றோ, என் கன்யாவை நான் பிரிய மாட்டேன் என்றோ சொல்லாமல் அவன் ஜனனியிடம் காரணம் கேட்டது ஜனனிக்கு திருப்தியைக் கொடுத்தது. தர்மாவிற்கு அவள் மீது