அமுதா ஓடாத குறையாக செல்ல, மஞ்சு எந்த பரபரப்பும் இல்லாது தட்டை கையில் எடுத்துக் கொண்டு எழுந்தாள்.
அவள் எப்போதோ சாப்பிட்டு முடித்து விட்டாள்... பேச்சு சுவாரசியத்தில் அங்கேயே அமர்ந்திருந்தாள்...
அவளுக்கு மீண்டும் மனோஜின் நினைவு வந்தது... எங்கே போய் விட்டான் அவன்??? காலையில் இருந்து அவள் கண்ணிலேயே பட வில்லையே!!!
தட்டை கழுவி காய வைத்து விட்டு கணவனை தேடிச் சென்றாள் மஞ்சு...
ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்தாள்... மனோஜை எங்கேயும் காணோம்...
போன் செய்துப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் உதயமானதுமே, வேண்டாம் என்று முடிவு செய்தாள்... மனோஜ் வேலை இல்லாமல் அவளை விட்டு விலகி இருக்க வாய்ப்பே இல்லை... வேலை நேரத்தில் அவனை தேவை இல்லாமல் போனில் அழைத்து தொல்லை செய்ய அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை...
எனவே, பால்கனி சென்று மெல்ல நடைப் பயிற்சி செய்தாள்...
மனோஜ்... அவர்களின் குழந்தை... என்ற நினைவுடனே நடந்துக் கொண்டிருந்தவள்... சோர்வாக உணர்ந்து உள்ளே வந்து அமர்ந்தாள்.
அமுதா லயாவிற்கு ஊட்டி விட செல்லம் கொஞ்சி கதை சொல்வது கொஞ்சம் கொஞ்சம் காதில் விழுந்தது...
ஒன்றிரண்டு நிமிடங்களில் சோர்வு போய் விடவும், எழுந்துக் கொண்டவள், தோழி இருக்கும் இடம் நோக்கிச் சென்றாள்...
இப்போதும் மனோஜ் கண்ணில் படவில்லை... அவனின் குரலும் எங்கேயும் கேட்கவில்லை