(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"இப்படியே எவ்வளவு நாள் இருக்க போறீங்க, பாரதி?" எனக் கேட்டான் விவேக்.

  

புரியாததுப் போல் பதில் சொல்லலாமா என யோசித்து விட்டு, வேண்டாம் என முடிவு செய்து,

  

"தெரியலை..." என பதில் சொன்னாள் பாரதி.

  

"நல்ல பதில் தான்... சரி இதைப் பத்தி அடுத்து நாம சந்திக்கும் போது பேசுவோம்... உங்க ஃப்ரெண்ட் எதோ முக்கியமான விஷயம் சொல்ல கூப்பிடுறாங்கப் போல இருக்கு, நீங்க போய் பேசுங்க, நான் கிளம்புறேன்....

  

அடுத்து எப்போது சந்திப்பது என கேட்கத் தோன்றியதை தடுத்து நிறுத்தி விட்டு,

  

"சரிங்க விவேக்..." என்று பொதுவான பதில் தந்தாள் பாரதி.

  

விவேக்கும் புன்னைகைத்து விட்டு, தன் காரை நிறுத்தி இருந்த இடம் நோக்கி சென்றான்.

  

**********

   

விவேக்குடன் பேசியதை மனதில் அசைப் போட்டபடி தன் அறை நோக்கி சென்றாள் பாரதி.

    

முதலில் அவனைப் பார்த்தப் போது அவனின் முகத்தில் தோன்றிய ஏமாற்றதிற்குகும், அவ்வப்போது தோன்றி மறைந்த ஆச்சர்யத்திற்கும் என்ன காரணம் இருக்க கூடும் என்று எண்ணியப்படி அறையை அடைந்தாள். மொபைலை தேடி எடுத்தவள், பவித்ராவிடம் இருந்து மூன்று மிஸ்ட் கால்ஸ் வந்திருப்பதை தெரிந்துக் கொண்டாள். உடனே பவித்ராவை மொபைலில் அழைத்தாள். உடனடியாக அழைப்பை ஏற்றுப் பேசிய பவித்ரா,

  

"ஹேய் பாரு, அப்படி எங்கே காணாமல் போன? எவ்வளவு நேரமா உன்னை தேடிட்டு இருக்கேன்..." என்றாள்!

  

"அப்படி என்ன விஷயம், பவி?"

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.