"எக்ஸாம் எப்படி மது? ஈசியா கஷ்டமா?" என்று ஆசிரியையின் கரிசனத்துடன் வினவினாள் பவித்ரா.
"ஈசி தான் மேம்... ஓல்ட் பேப்பர்ஸ்ல இருந்து தான் நிறைய கேள்வி வந்தது... எதிர்பார்த்ததை விட ரொம்பவே ஈசியா இருந்தது..." என்றாள் மது உற்சாகத்துடன்!
"குட்... அடுத்த எக்ஸாம் வெள்ளிக் கிழமை தானே?"
"ஆமாம் மேடம்... பாரதி மேடம் சப்ஜெக்ட் தான்..."
"அப்போ உனக்கு ஈசின்னு சொல்லு...."
சற்றே வெட்கத்துடன் புன்னகைத்த மது,
"உங்க சப்ஜெக்ட் கூட நான் நல்லா ப்ரிப்பேர் பண்ணி இருக்கேன் மேடம்... " என்றாள்.
"சரி தான்... நல்லா தான் இம்ப்ரூவ் ஆகிட்ட..."
பதிலுக்கு புன்னகைத்த மது, பாரதி பக்கம் திரும்பி,
"மேம், சின்ன அண்ணாக்கு ஏதோ பேப்பர்ஸ் தரேன்னு சொல்லி இருந்தீங்களாமே, அண்ணா, எடுத்துட்டு வந்திருந்தால் தரச் சொன்னார்..." என்றாள்!
பாரதி திகைத்துப் போனாள்!
பவித்ரா ஆர்வத்துடன் பாரதியைப் பார்த்தாள்!! தோழியின் திகைத்த முகத்தைப் பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்தது. என்ன விஷயம் என்பதுப் போல் இமைகளை ஏற்றி இறக்கி பாரதியைக் கேட்டாள்.
பவித்ராவிற்கு மட்டும் அல்லாமல் மதுவிற்கும் தெளிவுப் படுத்தி விட எண்ணி,