(Reading time: 10 - 20 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"மத்தபடி பவர் இருக்கோ இல்லையோ, இன்னைக்கு எனக்குத் தெரியும்..." என்று கண்களை உருட்டிக் கொண்டு சொன்னாள் வீணா!

  

சுவாரசியத்துடன்,

  

"அது என்ன விஷயம் வீணா?" என்றுக் கேட்டாள் கீதா.

  

"இந்துக்கு இப்போ ஒருத்தரைப் பத்தி தெரிஞ்சுக்காட்டி தலையே வெடிச்சிடும் போல இருக்கு... ஆனால் உங்க கிட்ட எப்படி கேக்குறதுன்னு யோசிக்குறா... பரவாயில்லை மை டியர் ஃபிரென்ட் இந்து மேடம், நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன்..."

  

"இது என்ன புதுக் கதை??" என்றாள் இந்து.

  

"அது யாரு வீணா???" என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் கீதா.

  

"வேற யாரு அக்கா, இன்னைக்கு நாம இந்து ஆஃபீஸ்ல மீட் பண்ணினோமே உங்க பிரதர் இன் லா மிஸ்டர் சஞ்சீவ் தான்..."

  

இந்துவின் முகம் நிறம் மாறியது... அது கோபத்தினாலா அல்லது வெட்கத்தினாலா என்று நிர்ணயிக்கும் முன், கீதா,

  

"சஞ்சீவா?????" என்றாள் ஆச்சர்யத்துடன்.

  

"ஆமாம் அக்கா... நீங்க அந்த ரூம்ல பார்க்கலையா என்ன... அவன்... ஊப்ஸ் சாரி, இல்லை இல்லை அவர், இந்துவை என்ன ஒரு லுக் விட்டுட்டு இருந்தாரு... இந்து பேசின ஒரு வார்த்தையும் கட்டாயம் அவர் மண்டையில ஏறி இருக்காது... நல்ல வேளை... நாம போய் காப்பாதிட்டோம்..."

  

"போதும் வீணா, ஸ்டாப் இட்..." என்றாள் இந்து கோபத்துடன்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.