(Reading time: 10 - 20 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"சரி, இப்போ என்ன உனக்கு சஞ்சீவை பத்தி தெரியனும்..." என்று கீதா கேட்டு முடிக்கும் முன்,

  

"எனக்கு எந்த சஞ்சீவைப் பத்தியும் தெரிய வேண்டாம், எந்த குரங்கைப் பத்தியும் தெரிய வேண்டாம்..." என்றாள் இந்து!

  

"குரங்கா????"

  

மற்ற இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

  

"ஆனால் இந்து, சஞ்சீவ் பண்ற சேட்டைக்கு அவரை குரங்குன்னு சொன்னால் தப்பில்லை தான்..." என்றாள் கீதா.

  

"கீதா அக்கா... இந்துக்கு அப்டேட்ஸ் வேண்டாம்னா இருக்கட்டும். எனக்கு சொல்லுங்க இந்த சஞ்சீவ் பத்தி... அது என்ன அவர் எம்பிஏ படிச்சுட்டு, ஏதோ ஹாஸ்பிட்டல் நடத்துறாருன்னு புதுசா சொன்னீங்க???" என்று ஆர்வத்துடன் கேட்டாள் வீணா.

  

"ஆமாம்... சஞ்சீவுக்கு எல்லா விஷயமும் விளையாட்டு தான்... சஞ்சீவுக்கு ராஜேஷ்ன்னு ஒரு ஃபிரெண்ட் இருக்கார். அவர் டாக்டரா இருக்கார். அவர் ஏதோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் நடத்தினால் நல்ல பிசினஸ்ன்னு சொன்னாராம். அதனாலே இவர் உடனே சுறு சுறுப்பா அண்ணன் சொன்னப் பேச்சையும் கேக்காமல் ஹாஸ்பிட்டல் மேனஜ்மென்ட் எடுத்துப் படிச்சார். சஞ்சீவ்க்குன்னு மாமாவும் அத்தையும் முன்னாடியே போட்டு வச்சிருந்த ஃபிக்சட் டெப்பாசிட்டுல இருந்து எல்லா பணத்தையும் எடுத்து மயிலாப்பூர்ல ஒரு ஹாஸ்பிட்டலை விலைக்கு வாங்கி இருக்கார். மருத்துவத்தை போய் ஒரு பிசினஸா பார்க்கிறாறேன்னு அத்தைக்கு வருத்தம். சரி, அதாவது ஒழுங்கா நடத்தினால் பரவாயில்லையே.. இவர் ஹாஸ்பிட்டல் வாங்கினதோட சரி... அந்த ஹாஸ்பிட்டல் பக்கமே போக மாட்டேங்குறார். கேட்டால் அங்க வேலை செய்ற மத்தவங்களே எல்லாம் பார்த்துப்பாங்கன்னு சொல்றார்... இருபது வருஷம் முன்னாடியே யோசிச்சு மாமா பசங்களுக்காக போட்டு வச்ச பணம்.. அதோட அருமை தெரியாமல் இவர் இப்படி இருக்காரேன்னு அத்தைக்கு கவலை... ஆனால், மத்தப்படி ரொம்ப நல்லவர் தான்... என்ன, கொஞ்சம் விளையாட்டுத்தனம் தான் இருக்கு. இன்னைக்கு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.