(Reading time: 10 - 20 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"வேற என்ன, எப்பவும் போல எங்க அத்தை வீட்டு விஷயம் தான்..."

  

"என்ன ஆச்சு இந்து? திரும்பவும் எதாவது பிரச்சனையா?" என்றாள் கீதா அக்கறையுடன்.

  

"பிரச்சனைன்னு பார்த்தால் எதுவும் இல்லை அக்கா... அத்தைக்கு தான் அந்த நந்தினிய பிடிக்காதே அதனால அப்போ அப்போ ஏதாவது சொல்வாங்க... எங்க அம்மாவை பஞ்சயாத்துக்கு கூப்பிடுவாங்க... அது என்னவோ தெரியலை... அம்மா எப்பவும் கொஞ்சம் நந்தினி சைடு தான் பேசுறாங்க..."

  

"அந்த நந்தினி பேரைக் கேட்டாலே எனக்கே ஆத்திரமா வருது... ஆனால் ஆன்ட்டி எப்படி அவளுக்கு போய் சப்போர்ட் பண்றாங்க?" என்றாள் வீணா.

  

"என்னவோ தெரியலை... நான் நந்தினி கிட்டப் பேசுறது இல்லை. அவளும் என்கிட்டே பேசுறது இல்லை. ஆனால் ஒரு விஷயம்... சேகர் அத்தானுக்கு அவள் ஒரு நல்ல ஒய்ஃப். அவங்க ரெண்டுப் பேருக்குள்ள நல்ல தெளிவான அன்பு இருக்கு.. நமக்கு என்ன..."

  

"நானா இருந்தா நந்தினி செஞ்சதுக்கு அவள் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்... அடுத்த தடவை ஆன்ட்டிய பார்க்கும் போது நான் நேராவே அவங்க கிட்ட கேட்கத் தான் போறேன்.."

  

"ஹே வீணா கூல் டௌன். ஆன்ட்டியப் பத்தி உனக்கு தெரியாதா என்ன? அவங்க யோசிக்காமல் எதுவுமே செய்ய மாட்டாங்க," என்றாள் கீதா.

  

"அது என்னவோ தெரியலை... ஆனால் அம்மா நந்தினியையும் என்னோட எஸ் எ இண்டஸ்ட்ரீஸ் பார்த்துக்கோன்னு அனுப்பாத வரைக்கும் பரவாயில்லை...." என்றாள் இந்து கசப்புடன்!

  

"அது எப்படி இந்து????" என்றாள் வீணா ஆச்சர்யத்துடன்.

  

"ஆமாம் வீணா, அத்தைக் கிட்ட 25% ஷேர் இருக்கு. சேகர் அத்தானுக்கு இதுல அவ்வளவு ஆர்வம் இல்லை. அதனால சும்மா மீட்டிங் மட்டும் வந்துட்டுப் போய்டுவார். நிஜமா

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.