(Reading time: 5 - 9 minutes)
Un katal iruntal potum
Un katal iruntal potum

“க்கும்!!! அப்போ இதுக்கு மேல எனக்கு இங்கே வேலை இல்லை, நான் கிளம்பலாம் போல இருக்கே?” என்றாள் ஷீலா கேலியாக!

  

அந்த கிண்டல் தோரணை புரிந்து விழித்துக் கொண்ட சௌந்தர்யா,

  

“இன்னும் ஃபைல் டீடைல்ஸ் நீ சொல்லவே இல்லையே, ஷீலா... அதைக் கொடுத்துட்டுப் போ...” என்றாள்.

  

“சதா, நீங்களே அவக் கிட்ட கொடுத்திருங்களேன்...” என்று ஷீலா சொல்லவும், கண்கள் மின்ன,

  

“சரி...” என்றான் சதானந்தன்!

  

“ஈவ்னிங் உங்களுக்காக நான் வெயிட் செய்வேன்... மறந்திராதீங்க சதா...” என்ற ஷீலா, சௌந்தர்யாவின் முகத்தில் அவள் சொன்னதைக் கேட்டு ஏற்படும் மாறுதலை மனதினுள் ரசித்தப் படி,

  

“ஓகே சௌ, லஞ்ச் டைமில் பார்ப்போம்...” என்று சொல்லிவிட்டு நடந்தாள்.

  

காதலுக்கும் பொறாமைக்கும் அப்படி என்ன தான் தொடர்பு இருக்கிறதோ! கல்லையே போட்டால் கூட கொஞ்சமும் கலங்காமல் இருக்கும் சௌந்தர்யா, அவள் சதாவிடம் சொன்னதைக் கேட்டு முகம் மாறிய விதத்தை எண்ணி சிரித்தப் படி சென்றாள் ஷீலா!

  

கண்டதும் காதல் வர சாத்தியமிருக்கிறதா என்ன??? ஷீலாவிற்கு தெரியவில்லை!

  

சரி சதாவோ, சௌந்தர்யாவோ விஷயத்தைப் போட்டு உடைக்கட்டும், அப்போது தெரிந்துக் கொள்ளலாம்... என தனக்குள் யோசித்துக் கொண்டே நடந்தாள் அவள்!

    

   

தொடரும்...

   

Go to Un Kadhal irunthal pothum...! story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.