தொடர்கதை - நிலவே முகம் காட்டு - 05 - சித்தார்த்
ஏஞ்சல் தன்னிடம் பேசியவனுக்கு பதில் சொல்வதற்கு முன் முதலில் புன்னகைப் புரிந்தாள்.
"எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை. நீங்க தான் பேமிலியோட வந்திருக்கீங்க, பாவம், இப்போ காட்டேஜும் இல்லை. கஷ்டம் தான்!" என அவனிடம் சொன்னாள்.
அவள் சொன்னதை அவனும் ஆமோதித்தான். பிரீத்தியிடம் இருந்து ஓடி வந்த ஷில்பாவை கையில் தூக்கிக் கொண்டவன், "ஆமாம். எங்களை எல்லாம் விட ஷில்பாக்கு தான் பெரிய ஏமாற்றம். இப்படி காட்டேஜ் இல்லாமல் போகும்ன்னு நினைக்கலை," என்றான் ஏமாற்றத்துடன்.
"நாம அப்போ காட்டேஜ் போகலையா? அப்போ எங்கே போறோம்? நான் வீட்டுக்கு வரலை!" ஷில்பா அதுலிடம் சண்டைக்கு வந்தாள்.
அவளை அணைத்துக் கொண்டு அமைதிப் படுத்த முயன்ற அதுல், அப்படியே எதிரே நின்றிருந்த பூஜாவைப் பார்த்து நட்புடன் புன்னகை செய்தான்.
அவளும் அவனின் தர்ம சங்கட நிலைமையை உணர்ந்துக் கொண்டவளாக தலையை அசைத்தாள்.
"யாரு உங்களுக்கு காட்டேஜ் புக் செய்தது? ட்ராவல் எஜன்ட்டா??? அவரைக் கூப்பிட்டு நல்லா திட்டுங்க. பெரியவங்களுக்கு பரவாயில்லை குழந்தைகளுக்கு எவ்வளவு ஏமாற்றமா இருக்கும்."
"ட்ரூ! ஷில்பா ரொம்ப ஆசையா வந்தா. இருந்தாலும் என்ன செய்ய! புக் செய்தது ஏஜென்ட் இல்லை என் அண்ணன்."
"அப்படியா? நீங்க புக் செய்திருக்கனும். அவர் ஏனோ தானோன்னு செய்திருக்கார் போலருக்கு. இப்போ உங்க பொண்ணுக்கு தானே ஏமாற்றம்?"
அதுல் முதலில் அவள் சொல்வது புரியாது குழம்பிப் போனான்.
அவன் கையில் இருந்த ஷில்பா இறங்க முயற்சி செய்யவும், அவளை மெல்ல இறக்கி