திடீரென்று ஏஞ்சலுக்கு அந்த ஐடியா உதயமானது.
"பேசாம என் காட்டேஜை நாம ஷேர் செய்துப்போம். எனக்கு அவ்வளவு பெரிய த்ரீ பெட்ரூம் காட்டேஜ் முழுசா தேவைப்படாது." சொன்னப் பிறகு தான் என்ன சொன்னாள் என்பதே அவளுக்கு உரைத்தது. எதற்கு தேவையே இல்லாது வம்பை விலைக்கு வாங்குகிறாள்? அவளுக்குப் புரியவில்லை. ஆனால் சொல்லி விட்டாளே!! இனி என்ன செய்வது??
அதுல் நின்று அவளை திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் ஆச்சர்யம் நிறைந்து இருந்தது.
"பாவம், குழந்தை அழுறதைப் பார்த்தா பாவமா இருக்கு." வேகமாக காரணம் கூறினாள் ஏஞ்சல்.
அதுல் பதில் சொல்லாது ஸ்மைல் செய்து தலையை அசைத்தான். அவன் கண்ணில் இப்போதும் ஆச்சர்யம் அகலாது இருந்தது.
"தேங்க்ஸ். உங்களுக்கு நல்ல மனசு. இருங்க, நான் பேசிட்டு வரேன்."
அதுல் தன் குடும்பத்தினரை அணுகிப் பேசுவதை ஏஞ்சல் பார்த்துக் கொண்டே நின்றாள். அவர்கள் அனைவரும் இப்போது அவள் பக்கம் பார்த்தார்கள்.
ஏஞ்சலுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது புரிந்தது.
எதற்காக அவர்களை தன் காட்டேஜில் தங்க வழிய சென்றுக் கேட்டாள் என்பது தான் புரியவில்லை!
தொடரும்...