(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

சந்தோஷம் பொங்கியது, ஆனால் அதை வெளியில் காட்டி கொள்ளாது,

  

"பரவாயில்லைங்க.... அதனால் என்ன? உங்களுக்கு எத்தனையோ வேலை இருக்கும்... நான் உங்க கதையை கொடுக்க தான் வந்தேன்... மது காலேஜில உங்களை பார்த்து தரேன்னு சொன்னாள்... சரிங்க நீங்க உங்க ஷாப்பிங் கண்டின்யூ செய்ங்க..."

  

சொல்லிவிட்டு திரும்பி சென்றவனை பார்த்த படி சில வினாடிகள் நின்றிருந்தாள் பாரதி. அவனின் கோபம் அவளை பெரிதும் பாதித்தது... அவள் கதைகளை பற்றிய அவனின் கருத்தை அறிய அவளுக்கு விருப்பமாக இருந்தது... ஒருவேளை அவன்

  

வந்த நேரத்தில் அவள் ஹாஸ்டலில் இருந்தது அவனுக்கு தெரிந்திருக்குமோ? ஆனால் அவன் இப்படி விலகி செல்வதை தானே அவள் விரும்பியதும்? இப்போது ஏன் மனம் இப்படி வலிக்கிறது?

  

"எக்ஸ்க்யூஸ் மீ..." என்றக் குரலில், வழியில் நிற்பதை உணர்ந்து அவள் விலகி சென்றாள். மற்ற பொருட்களை வாங்கி, பில் போட்டு, பணம் செலுத்தி அவள் வெளியில் வந்த போது, கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்து விட்டதை உணர்ந்த போதும், அவளின் கண்கள் அவசரமாக அந்த இடத்தை சுற்றி தேடியது... அங்கே எங்கும் விவேக்கை காணாமல் சிறிது ஏமாற்றத்துடன், மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்த படி அங்கிருந்து சென்றாள் பாரதி.

  

**********

   

பாரதியின் கண்கள் அவனை தேடியதையும், பின் ஏமாற்றத்துடன் அவள் சென்றதையும் சற்று தொலைவில் இருந்த காபி ஷாப்பில் அமர்ந்த படி பார்த்துக் கொண்டிருந்த விவேக்கின் முகத்தில் புன்னகை தோன்றியது. கூடவே அவளை இப்படி அலைகழிக்க வேண்டி இருக்கிறதே என்று வருத்தமும் தோன்றியது. சரி எல்லாம் அவளின் நன்மைக்காகவும் தானே? அவள் அவனின் மனைவியாக வந்த பின் அவள் மனதில் சின்ன சஞ்சலம் கூட இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  

ல பல எதிர்கால கனவுகளோடு அவன் வீடு வந்து சேர்ந்த போது, அவனுக்காக காத்திருந்தது

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.