தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 10 - சசிரேகா
மதுரையிலுள்ள கல்பனாவின் அப்பா வீடு
விடிந்தது.
விடிகாலை 4 மணிக்கு வீட்டிற்குள் அலாரம் அடிக்க மொத்த பேரும் உறக்கம் கலைந்து எழுந்தார்கள். அந்நேரம் எப்படி குளிப்பது எல்லாம் கெஸ்ட் ஹவுஸில் சென்று குளிக்கலாம் என நினைத்துக் கொண்டு பேருக்கு முகம் கழுவி காபி, பால், டீ என சிலவற்றை மட்டும் குடித்துவிட்டு பஸ் ஸ்டான்டு செல்ல தயாரானார்கள் அனைவரும்.
சொக்கனும் அந்நேரம் எந்த ஆட்டோ வரும் என நினைத்து காரிலேயே 5 டிரிப் அடித்தான். அனைவரையும் அழைத்துக் கொண்டு பஸ் ஸ்டான்டில் சே ... பஸ் ஸ்டான்டை அடைந்தவன் கிளம்பி விட்ட பஸ்ஸை ஓடிச்சென்று பிடித்து ஏறிக்கொண்டான். மறக்காமல் அனைத்து உறுப்பினர்களும் பஸ்சில் உள்ளார்களா என செக்கிங் வேறு செய்துக் கொண்டான்.
This story is now available on Chillzee KiMo.
...