அவளின் அதட்டலை ஒத்திப்போட்டவன் அவள் புறம் திரும்பி அமர்ந்து அவளை உன்னிப்பாக பார்த்துவிட்டு மென்மையாக அவளை தொட்டு தடவி பேசலானான்.
”நான் உன்னை முதல்ல பார்த்தப்ப உன்னோட நேர்மை என் கண்ணுக்கு தெரிஞ்சது. அப்புறம் நீ கஷ்டப்பட்டு சமையல் செஞ்சப்ப உன்னோட பிடிவாதம் தெரிஞ்சது. எல்லாருக்கும் சாப்பாட்டை பரிமாறினப்ப உன்னோட பொறுமை தெரிஞ்சது. பசியில நீ தவிச்சப்ப உன்னோட கஷ்டம் தெரிஞ்சது, உன்னை விட்டு எல்லாரும் போன பின்னாடி தனிமையா நீ இருந்தப்ப உன்னோட வேதனை தெரிஞ்சது, யார்னே தெரியாத நான் உன்னை கூட்டிட்டு சுத்தினப்ப என் மேல நீ வெச்சிருந்த நம்பிக்கை என் கண்ணுக்கு பளிச்சுன்னு தெரிஞ்சது, அதை விட முக்கியமா உன்னோட இந்த முகம்” என சொல்லி அவளது முகத்தை ஒரு முறை தடவவும்
”என்ன செய்றீங்க இப்படி பண்ணாதீங்க தப்பு”
“ஏய் நிறுத்துடி என்கிட்டயே தப்பு ஒப்புன்னு பேசிக்கிட்டு, நான் பேசறதை முழுசா கேளு சரியா” என சொல்லிவிட்டு அவளது முகத்தையே பார்த்துக் கொண்டே பேசலானான்.
”இந்த முகத்துக்குள்ள இருக்கற வெகுளித்தனம் என் கண்ணுக்கு தெரிஞ்சது.”
என சொல்லிவிட்டு அவளது கண்களை தன் விரலால் தடவிக் கொண்டே பேசினான்
”இதோ இந்த அழகான ரெண்டு கண்கள் இருக்கே, இந்த கண்களுக்குள்ள இருந்த ஏக்கம் என் கண்ணுக்கு தெரிஞ்சது.”
என சொல்லிவிட்டு அடுத்து தன் கை விரல்களால் அவளது கன்னத்தை தடவி லேசாக கிள்ளிவிட்டு தடவிக் கொண்டே உளறினான்.
”இதோ இந்த பட்டுக்கன்னம் இருக்கே என் முத்தத்துக்காக ஏங்கறது தெரிஞ்சது.”
அடுத்து அவளது உதட்டருகே விரல்களை கொண்டுச் சென்றான்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.