என பாடி ஒருவழியாக களைத்து தடுமாறினான் ஜெகவீரன் அதற்குள் மழையும் நின்றுவிட மற்றவர்களின் உதவியோடு அவனை காரில் ஏற்றியவள் காரை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேரந்தாள். வாசலிலேயே சொக்கன் பதட்டமாக காத்திருந்தான். கார் வரவும் ஓடிவந்தவனைப் பார்த்த அங்கிதா
”அண்ணா அவர் போதையில இருக்காரு பார்த்துக்குங்கண்ணா” என சொல்ல சொக்கனும் ஜெகவீரனை எழுப்பி தள்ளிக் கொண்டு அவன் அறையை அடைந்து படுக்க வைத்தான்.
காய்ச்சல் ஓடி போயிருந்தாலும் கசாயத்தின் காரணமாக உடல் வேர்த்துக் கொண்டிருக்கவே வேறுவழியில்லாமல் அவனது சட்டையையும் வேட்டியையும் கழட்டிவிட்டு ஜட்டியுடன் படுக்க வைத்துவிட்டு அறையை சாத்திவிட்டு தன் அறைக்குச் சென்றான் சொக்கன்.
அறைக்குள் நுழைந்த அங்கிதாவிற்கு மனம் ஒருநிலையில் இல்லை. அவளது மனம் முழுக்க அவனது நினைவுகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்க அவனை காண வேண்டும் என நினைத்து உடனே அவனை தேடி அவனது அறைக்கு சென்றாள். அறைக்குள் நுழைந்து பார்த்து விக்கித்து நின்றாள்.
அவனை அப்படி அரைகுறை உடையில் பார்ப்பதை நினைத்து முதலில் தலை குனிந்தவள் சட்டென அந்த அறையை விட்டு வெளியே செல்ல மனது பரப்பரத்து திரும்பியவள் என்ன தோணிற்றோ சற்று கூச்சத்துடன் திரும்பி ஜெகவீரனையே ஆற அமர ரசித்துப்பார்த்துவிட்டு அறைக்கதவை சாத்திவிட்டு கட்டிலுக்கு வந்தவள் அவன் பக்கத்தில் ஒருக்களித்து படுத்துக்கொண்டே அவன் முகத்தை பார்த்தாள்.
அனைத்து சேட்டைகளையும் செய்துவிட்டு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தவனைக் கண்டு சிரித்தவள் அவனது கன்னத்தை தன் கை விரல்களால் தீண்டினாள். அவனது மீசையிடம் விரல்கள் வர ஏதோ ஒருவித ஈர்ப்பு தோன்றி ஜெகவீரனை போலவே அவனது மீசையை முறுக்கிவிட்டு அவனது முரட்டு உதடுகளை தொட்டுப்பார்த்தாள். அவளது கை விரல்கள் நடுங்கியது. அவளது உடலில் சிறிது உஷ்ணம் பரவியது. உடலுக்குள் சில ஹார்மோன்கள் அவளது ஆசையை மூட்டிவிட்டது.
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.