“நீ போய் தான் பாரேன்...”
“அப்போவும் அவர் மாறாமல் இருந்தா எங்க அன்பு உண்மைன்னு ஏத்துப்பீங்களா???”
“அட அட அடா... என்ன ஒரு காதல்!”
“நீங்க கேலி பேசினாலும் எங்க இரண்டு பேர் நடுவுல இருக்கிறது உண்மையான காதல் தான்... என் மனசில இருக்க தூய்மையான அன்பை நம்பி, அவர் கிட்ட கூட சொல்லாமல் நான் இங்கே இருந்துப் போறேன்... அதுக்காக எனக்கு நீங்க ஒரு பைசாவும் தர வேண்டாம்... எங்க அன்பை உங்களுக்குப் புரிய வைக்க நான் இதை செய்றேன்... எனக்கு அவரைப் பத்தி தெரியும்... அவர் என் மேல வச்சிருக்க அன்பு உண்மை... நீங்க சொல்வதுப் போல எல்லாம் அவர் என்னை மறக்க மாட்டார்.. என்னைத் தேடி அவரே வருவார்...”
சுவாதி இது எதையும் யோசித்து பேசவும் இல்லை, சொல்லவும் இல்லை.
அவளை இயக்கியது எல்லாம் விஷாகன் அவள் மீது வைத்திருக்கும் அன்பின் மீதிருந்த நம்பிக்கையும், அதை அவளின் எதிரே இருந்தவர்களுக்கு நிருபிக்கும் ஆர்வம் மட்டுமே!
ஆனால் தம்பதிகளான அவர்கள் இருவரின் இடையே இருக்கும் அன்பை அவள் மற்றவர்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை!
எப்படியோ, விதி ஏற்கனவே ஆரம்பித்திருந்த விளையாட்டில் தன் பங்காக தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டாள்.
“ஹ்க்கும்... இங்கே இருந்து நேரா, உன் சித்தப்பா வீட்டுக்குப் போக போற... நீ இங்கே இல்லைன்னு தெரிஞ்ச உடனே, அவன் உன்னை தேடி அங்கே வந்தா உங்க காதல் தெய்வீக காதலாகிடுமா?”
“நீ சும்மா இரு, பத்மினி...! சரி, நீ சொல்ற மாதிரி விஷாகன் அப்படி உன்னை தேடி
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.