வரானான்னு நானும் பார்க்கிறேன்...” என்றாள் விஜயா.
“நீங்க சொல்ற மாதிரி நான் கெட்டவளா இருந்திருந்தா கூட, உங்க கிட்ட இருந்து பணத்தை வாங்கிட்டு என் சித்தப்பா வீட்டுக்கு தானே போயிருப்பேன்...!!! அப்புறம், இப்போ மட்டும் அதை செய்தால் என்ன? எனக்கு சித்தப்பா வீடு தவிர வேற எந்த இடமும் தெரியவும் தெரியாது... உங்களுக்கு என்னுடையது உண்மையான அன்புன்னு காட்ட தான் அவர் கிட்ட ஒரு வார்த்தையும் சொல்லாமல் போறேன்... அவர் மேலயும் அவர் அன்பு மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு... அவர் உங்க மனசையும் மாத்துவார் எனும் நம்பிக்கையும் அதிகமா இருக்கு...!”
பஸ் டிக்கெட்டிற்கு என தன்னுடைய பர்ஸை மட்டும் எடுத்துக் கொண்டு, அடுத்த ஐந்து நிமிடங்களில் வீட்டை அந்த விட்டு வெளியே வந்திருந்தாள் சுவாதி...! அவள் வெளியே செல்வது கண்ணில் தெரிந்தாலும் அங்கிருந்த மூன்றுப் பேருமே கண்டுக் கொள்ளாமலே இருந்தார்கள்...
“விஷாகன் கிட்ட என்ன சொல்றதுன்னு சொல்லுங்க, அண்ணி...”
“ம்ம்ம்... யோசிப்போம்... ஆனால் இவளோட நாம பேசின விஷயம் எதையும் அவன் கிட்ட சொல்ல வேண்டாம்....” என்ற விஜயா, அவளின் அருகே இருந்த விஷ்ணுப்ப்ரியாவை பார்க்க, அவள் அலட்சியமாக தோளை குலுக்கினாள்.
“ஒழுங்கா நீங்க தரேன்னு சொன்ன பணத்தை வாங்கிட்டுப் போய் லைஃப்ல செட்டில் ஆகி இருக்கலாம் ம்மா...! இவ்வளவு பெரிய டிராமா எதுக்குன்னு தெரியலை...”
“ரேட்டை ஏத்த தான், வேற என்ன... அவ கோடிக் கணக்கில சுருட்ட யோசிச்சிருப்பா, நாம லட்சக் கணக்கில சொன்னா விட்டுட்டுப் போயிடுவாளா என்ன? இன்னைக்கு வந்தவனுக்கும் அவளுக்கும் வேற நடுவுல என்னவோ, யாருக்குத் தெரியும்...”
“போதும் அத்தை கேட்கவே அருவெறுப்பா இருக்கு.... இதை பத்தி எல்லாம் நான் ஏன் அண்ணா கிட்ட பேசுறேன்...? நான் ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டேன்...”
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.