பழைய நினைவுகளின் தாக்கத்தினால், ராதிகாவின் மனம் இப்போதும் இனிய நினைவுகளால் சூழப் பட்டு இருந்தது. ஏனோ கணவனுடன் உடனே பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.
பொதுவாக அவனுடைய ஆஃபிஸ் நேரத்தில் அவள் அவனை தொல்லை செய்வதில்லை. இருந்தாலும் இன்று ஏனோ பேச வேண்டும் என்று தோன்றியது!
கௌஷிக் அவனுடைய டீமில் இருந்த லக்ஷனாவை மும்முரமாக திட்டிக் கொண்டிருந்தான். அவள் செய்தது என்னவோ சிறிய தவறு தான். ஆனால் ஆபிஃசில் எப்போதும் கறார் பேர்வழியான கௌஷிக் அதை மலையாக்கி திட்டிக் கொண்டிருந்தான். அவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று லக்ஷனா யோசிக்கும் போது, கௌஷிக்கின் செல்போன் அடித்தது.
ராதிகாவின் பெயரை பார்த்த கௌஷிக், அவளிடம் அப்புறம் பேச சொல்லும் எண்ணத்துடன், அழைப்பை ஏற்றான்.
"ஹாய் கௌஷி, டிஸ்டர்ப் செய்றேனா?"
ராதிகாவின் குரல் குழைந்து ஒலித்தது.
கௌஷிக்கின் கோபம் எல்லாம் வடிந்துப் போனது. எதிரே இருந்த லக்ஷனாவைப் பார்த்தவன்,
"ஒன் மினிட், ராது" என்று மனைவியிடம் சொல்லி விட்டு,
"இனிமேல் பீ கேர்ஃபுல், லக்ஷனா... நவ் யூ கேன் கோ" என்றான்.
லக்ஷனாவிடம் தெரிந்த அந்த சின்னக் கேலி புன்னகை கூட கௌஷிக்கை அசைக்கவில்லை.
தன்னுடைய கேபினில் இருந்து எழுந்து வெளியே வந்தவன்,
"சொல்லு ராது, உன் குரல் என்னவோ சொல்லுது! என்ன விஷயம்?" என்றான்.
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.