சாந்தியின் காதல் பார்வைக்கான காரணம் என்ன என்று கண்டுப்பிடிக்க அரவிந்திற்கு அதிக நேரம் தேவைப்படவில்லை... அவனுக்குமே அவளின் பாதத்தை பிடித்ததுமே முதல் முதல் இருவரும் லண்டன் யூனிவர்சிட்டியில் நேருக்கு நேருக்கு மோதிக் கொண்டதும், புக் அவளின் காலில் விழுந்ததும், அவன் அதை பரிசோதித்ததும் தான் நினைவுக்கு வந்தது...
“திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்குறோம்னு... முள்ளு சிம்பாலிக்கா சொல்லுதோ ஹனி...” என்ற அரவிந்த், அத்தோடு நிறுத்தாது, சாந்தியை அள்ளிப் பருகுவதுப் போல பார்த்தப் படி,
“கண்ணை மூடி உனக்கு ரொம்ப பிடிச்சதை நினைச்சுக்கோ, ஹனி....” என்றான்...
அவ்வளவு தான் சாந்தியின் முகம் செக்கச்செவேல் என சிவந்து மின்னியது...
அரவிந்த் விரும்பியதும் அதே தான்... ஆனால் அவளின் வெட்கத்தை... அதனால் பல ஆயிரம் மடங்கான அவளின் அழகைப் பார்த்ததும் அவனால் சும்மா இருக்க இயலவில்லை...
“ஹுஹும்... இதுக்கு மேல இங்கே இருந்தா சரியா வராது...” என்றவன், மெல்ல அவளின் பாதத்தை கீழே வைத்து விட்டு எழுந்து நின்றான்...
சாந்தி என்ன என்று யோசிக்கும் முன்பே அவளை தன் இரண்டு கைகளிலுமாக தூக்கிக் கொண்டான் அரவிந்த்...
தடுமாறிப் போனவளாக,
“அ...ர...வி...ந்...த்...” என்று திக்கித் திணறினாள் சாந்தி.
முன்பை விட இன்னும் நெருக்கத்தில் தெரிந்த அவளின் முகமும், அவளின் அந்த தடுமாற்றமும் அரவிந்தை போதைக் கொள்ள செய்தது.
“ஆல்ரெடி நான் ஒரு மார்க்கமா இருக்கேன், ஹனி... நீ வேற இப்படி கொஞ்சலா அ...ர...வி...ந்...த்...ன்னு எல்லாம் செல்லம் கொஞ்சுனேன்னு வை... ரோடுன்னு கூட பார்க்காம...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.