இரவு நேரம் வர வர ரேவதிக்கு உறக்கம் வந்தது பசியும் பிடிங்கியது அபியை பார்க்க அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்
”இதப்பாரு அன்புவுக்காக காத்திருக்கேன்னு சொல்லிட்டு முதல் ஆளா தூங்கறாளே சாப்பிடாம இருக்கா இவளை முதல்ல சாப்பிட வைக்கனும்” என எண்ணி அவளை எழுப்ப முயன்ற போது அன்பு வீட்டிற்குள் வந்தான்.
அங்கு ரேவதியிருப்பதைக்கண்டு வியந்தான் ரேவதியும் அபியை எழுப்பாமல் அன்புவிடம் வந்தாள்
”அன்பு ஒரு விசயம் பேசனும் அபியை பத்தி”
”எனக்குத் தெரியும் ரேவதி, அபி உன்கிட்ட எல்லாமே சொல்லியிருப்பா”
”ஆமாம் சொன்னாள் உங்க மேல தப்பில்லை அபி மேலயும் தப்பில்லை ஆனா உங்க ரெண்டு பேருக்கும் செட்டாகாது”
”அபி சாப்பிட்டாளா”
”இல்லையே உங்களுக்காகதான் வெயிட்டிங்”
”சரி அவளை எழுப்பிவிடு” என சொல்லியவன் கைகளில் ஏதோ பொருட்கள் இருப்பதைக்கண்டவள்
”என்ன இதெல்லாம் அன்பு”
“அபியோட கனவை முழுசா நிறைவேத்த முடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்சவரை நிறைவேத்தலாம்னு”
”புரியலை என்ன செய்யலாம்னு நினைக்கறீங்க
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.