சொக்கன் அழுதுக் கொண்டிருக்க ஜெகாவின் நிலைமை கவலைக்கிடமானது. அவன் என்னவென்று நினைப்பான். எதற்காக அழுகிறான் என சொன்னால்தானே புரியும், நித்யா ஏதாவது செய்துக்கொண்டாளா இல்லை சத்யாகருக்கு விவரம் தெரிந்து விட்டதா என பல யோசனைகள் அவன் மூளையை சாப்பிட ஆரம்பித்தது. குழப்பத்துடன் இருந்தவனின் நிலையைக் கண்ட தாத்தா வேதாச்சலம் ஃபோனை வாங்கி பொறுமையாக சொக்கனிடம் பேசினார்
”இந்தாப்பா தம்பி அழக்கூடாது நான் அங்கிதாவோட தாத்தா பேசறேன், முதல்ல என்ன விசயம் சொல்லுப்பா, என்னாச்சி பொறுமையா சொல்லு என்கிட்ட சொல்லு நான் ஜெகாகிட்ட சொல்லிக்கிறேன்” என நிதானமாக பொறுமையாக கேட்க சொக்கன் அழுதுக் கொண்டே விவரம் கூறவும் அதைக்கேட்டு அவரின் மனம் கனத்துவிட்டது ஃபோனை கட் செய்தார் வேதாச்சலம்
”என்னாச்சிங்க என்னவாம் அவனுக்கு” என ஜெகா கேட்க
“ஒண்ணுமில்லைப்பா சரி உன் அம்மா எங்க”
“ஊருல இருக்காங்க”
“சரி அவங்களை நான் பார்க்கனுமே”
“அதுக்கென்னங்க தாராளமா பார்க்கலாம்”
“இப்பவே பார்க்கனும்” என அவர் சொல்ல
”ஏன் என்னாச்சி”
“ஒண்ணுமில்லைப்பா திதி அப்புறமா கொடுக்கலாம் முதல்ல நல்ல விசயத்தை பத்தி பேசலாம்னுதான்”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.