வசந்தி மருமகளை சில வினாடிகள் பார்த்தாள்... பின்,
“நீ தான் முடிவு செய்யனும், தீபா... அபி பேசின விதத்தைப் பார்த்தால் தன் தப்பை உணர்ந்துட்டான்னு எனக்குத் தோணுது....” என்றாள்.
தீபா இடதுக் கையை கன்னத்தில் வைத்து வசந்தியையே பார்த்தப் படி அமர்ந்திருந்தாள்... வசந்தியே தொடர்ந்துப் பேசினாள்.
“எனக்கு கல்யாணமான காலத்தில எல்லாம் மனைவியை கை நீட்டி அடிக்குறது புருஷனோட உரிமைன்னு பொதுவா கருத்து இருந்தது... இப்போ அதெல்லாம் மாறிப் போச்சு... அப்படி ஆம்பளைங்க நடந்துக்கிட்டா பிடிச்சு ஜெயில்ல போட சட்டம் இருக்கு... நீ படிச்ச பொண்ணு...”
“அத்தை... இருங்க இருங்க... அவர் சாரி சொல்லிட்டார்... அவ்வளவு தான் சண்டை முடிஞ்சிடுச்சுன்னு விட்டுடனும்னு சொல்றீங்களா???”
“இல்லம்மா... நான் அப்படி நினைக்குறவளா இருந்தா, நீங்க இரண்டுப் பேரும் ஒருத்தர் மூஞ்சியைப் பார்க்காம வேற, வேற ரூமுல இருக்கும் போதே சொல்லி இருக்க மாட்டேனா???”
“அப்போ???”
“நீ தான் முடிவு எடுக்கனும் தீபா... ஆனால்...“
“என்ன அத்தை???”
“என்ன முடிவு எடுத்தாலும் உங்க குழந்தையையும் மனசில வச்சு முடிவு எடு... அபினவ் என் மகனா இருந்தாலும் உன்னை கை நீட்டி அடிச்சது எனக்குப் பிடிக்கலை... அது தப்பு தான்... அவன் இப்போ நிஜமாவே மனசு வருத்தப் பட்டு மன்னிப்பு கேட்கிறான்...“
வசந்தி வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தாள்....
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.