Page 1 of 6
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 24 - பிந்து வினோத்
நட்பால் இணைவோம்...!
வசந்தி மருமகளை சில வினாடிகள் பார்த்தாள்... பின்,
“நீ தான் முடிவு செய்யனும், தீபா... அபி பேசின விதத்தைப் பார்த்தால் தன் தப்பை உணர்ந்துட்டான்னு எனக்குத் தோணுது....” என்றாள்.
தீபா இடதுக் கையை கன்னத்தில் வைத்து வசந்தியையே பார்த்தப் படி அமர்ந்திருந்தாள்... வசந்தியே தொடர்ந்துப் பேசினாள்.
“எனக்கு கல்யாணமான காலத்தில எல்லாம் மனைவியை கை நீட்டி அடிக்குறது புருஷனோட உரிமைன்னு பொதுவா கருத்து இருந்தது... இப்போ அதெல்லாம் மாறிப் போச்சு... ... டிச்சது எனக்குப் பிடிக்கலை... அது தப்பு தான்... அவன் இப்போ நிஜமாவே மனசு வருத்தப் பட்டு மன்னிப்பு கேட்கிறான்...“
This story is now available on Chillzee KiMo.
...
வசந்தி வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தாள்....