(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 29 - பிந்து வினோத்

29. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

பாரதி அதன் பின் மும்முரமாக காரியத்தில் இறங்கினாள். விஸ்வநாதனை சந்தித்து தன் திருமணம் பற்றி சொன்னவள், விவேக்கின் புதிய தொழிலுக்கு தேவை படும் பணம் குறித்தும் சொன்னாள்.

  

"தப்பா எடுத்துக்காதீங்க அங்கிள், உங்க பணம்..."

  

"பாரதி, அது உன்னுடைய பணம், நீ என்னிடம் உரிமையோடு கேட்கலாம். உன் கல்யாண விஷயம் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? விவேக்கை எனக்கு நல்லா தெரியும், தங்கமான பையன்... நான் உடனே பணத்திற்கு ஏற்பாடு செய்றேன்... நீ எப்போ வந்து வாங்கிக்குற சொல்லு, நான் ரெடி செய்து வைக்கிறேன்..."

  

"இல்லை அங்கிள் நீங்களே அதை அவர் கிட்ட கொடுத்திடுங்களேன்..."

  

"சரிம்மா, நானே கொடுக்கிறேன்... உங்க அப்பா இருந்திருந்தா சந்தோஷப் பட்டிருப்பான்... "

  

*****

   

தன் பின் பாரதியின் மனதில் பெரிய குழப்பங்கள் இல்லை. விவேக்கே சொன்னது போல், இந்த திருமணம் அவளுக்கு ஒரு பாதுகாப்பு கருவி, அவனுக்கு அவனின் கனவை நனவாக்கும் நிகழ்ச்சி... ஆனால், அவனின் பார்வையும் அன்று அவன் அவள் அருகில் வந்ததும்...??? இது எல்லாம் கூடுதல் 'எக்ஸ்ட்ரா' விஷயங்கள் போலும்... மனதில் இந்த எண்ணம் ஏற்பட்ட பின், அவளுக்கு குழப்பங்கள், சஞ்சலங்கள் மட்டும் இல்லாமல், மனமகளுக்கே உரிய பரபரப்பும் இல்லாமல் போனது.

  

பிடிக்கவில்லை என்ற பாட்டை நிறுத்தி விட்டிருந்த தோழியை சந்தேகமாக பார்த்த போதும், திருமணம் முடியட்டும் என்று பவித்ராவும் அவளிடம் எதையும் கேட்கவில்லை.

   

நிச்சயிக்கப் பட்டிருக்கும் நாளில், காலையில் திருமணம் மாலையில் வரவேற்பு என்று திட்டமிட்டிருந்தனர்...

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.