அந்த திருமண நாளும் வந்தது... மந்திரங்களை உச்சரித்தபடி மணவறையில் காத்திருந்த விவேக், பொண்ணை கூப்பிடுங்க என்றக் குரலை தொடர்ந்து, அலங்காரம் செய்த பதுமையாக நடந்து வந்த பாரதியை இமைக்க மறந்து பார்த்தான். அவன் அருகில் நின்றிருந்த நிரஞ்சன்,
"டேய், ஏன்டா இப்படி பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி பார்க்கிற? எல்லோரும் உன்னை பார்த்து சிரிக்குறாங்கடா..." என்றான்.
மற்றவர்களுக்காக கஷ்டப்பட்டுப் பார்வையை திருப்பியவன், அவனருகில் உரசியபடி பாரதி வந்து அமரவும், சொர்கலோகத்திற்கே வந்து விட்டதாக தோன்றியது! அந்த இனிய உணர்வுடன், குறித்த நல்ல நேரத்தில் பாரதியின் கழுத்தில் தாலி அணிவித்து அவளை தன் வாழ்க்கை துணைவியாக ஏற்றுக் கொண்டான். விரும்பியவளையே மனைவியாக அடைந்ததில் அவன் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.
ஆனால் அதன் பின்னும் பாரதியுடன் நேரம் செலவிட முடியாமல் உறவு மற்றும் நட்பு கூட்டம் அவர்களை சூழ்ந்துக் கொண்டது. எப்போதடா, இரவு வரும், பாரதியுடன், தனியாக நேரம் செலவிடலாம் என மனதுள் ஏங்க துவங்கினான் விவேக்!
மாலையில் வரவேற்பிற்க்கு சற்றே எளிமையாக தயாராகி இருந்த பாரதியை பார்த்த கற்பகம்,
"என்ன பாரதி இது, நகை எல்லாம் எங்கே? எடுத்து போடு... பெரிய பெரிய ஆள் எல்லாம் வருவாங்க... அவங்க கேள்வி கேட்பது போல் வைத்துக் கொள்ள கூடாது..." என்றாள்!
காலையில் இருந்து பட்டு புடவையும் நகைகளுமாக இருந்து அலுத்து போயிருந்த பாரதிக்கு, மீண்டும் அது போல் நகைகளை வாரி அணிந்துக் கொள்ள பிடிக்கவில்லை. அவள் அப்போது அணிந்திருந்த நகைகள் போல் தான் பல திருமண வரவேற்புகளில் மணப்பெண் அணிந்து பார்த்திருக்கிறாள். கற்பகம் சொன்னதை கேட்டு முகம் சுழித்தவள், பவித்ராவின் முகத்தை பார்தது விட்டு, முகத்தை சீர்படுத்திக் கொண்டு, சரியென தலை அசைத்தாள்.
எதிர்பார்த்தது போலவே, வரவேற்ப்பும் நல்ல முறையில் நடந்தது. வந்திருந்தவர்களை பாரதிக்கு அறிமுக படுத்திய விவேக், அவளிடம் ரகசியமாக,