(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

அம்மா கிட்ட வெளியே தெரியுற மாதிரி சண்டை போடலையே தவிர, உன்னை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு தான் அழுத்தமா சொன்னேன்.......  “

  

அப்போது ராஜீவின் கைப்பேசி அலறியது. எழுந்து சென்று அதை கையில் எடுத்தவன், அழைப்பு வந்திருப்பது தன் காரியதரிசியின் எண் என்பதை தெரிந்துக் கொண்டு, கீதாவிடம் சொல்லி விட்டு ஃபோனை எடுத்துப் பேசினான். பேசி முடித்து விட்டு கைப்பேசியை வைத்து விட்டு மனைவியின் பக்கம் திரும்பியவன், அவள் இன்னும் சிந்தனையில் இருப்பதைக் கண்டான். காலையில் தலைக்கு குளித்து, காய வைத்து, லூசாக பின்னி விட்ட நீண்ட கூந்தல் ஷோஃபாவின் இருக்கையின் பின்புறம் நீண்டு தொங்க, நெற்றியில், வகிட்டில் இட்டிருந்த குங்குமம் மின்ன, கழுத்தில் அவள் அணிந்திருந்த தங்க தாலி தனி களையை கொடுக்க, பக்கவாட்டில் இருந்த ஜன்னலில் இருந்து கீதாவின் முகத்தின் பின் புறம் அடித்த வெயில் அவள் தங்க நிறத்தை மேலும் எழிலாக காட்ட, மெய் மறந்து மனைவியைப் பார்த்து நின்றான் ராஜீவ். வீட்டிற்க்கு வரும் மருமகளை மஹாலக்ஷ்மி என்று சொல்வது இதனால் தான் போலும்... எத்தனை மாற்றங்கள் வந்தாலும், நம் பாரம்பரியத்தை பின்பற்றும் போது ஏற்படும் தனிக் களையை வேறு எங்கே பார்க்க முடியும்?

  

சிந்தனை கலைந்து திரும்பிய கீதா, கணவனின் பார்வையைக் கண்டு, என்ன விஷயம் என்பதுப் போல் பார்த்தாள். எதுவும் சொல்லாது அவள் அருகில் வந்து அமர்ந்தவன்,

  

"அம்மா உன்னை எங்க வீட்டுக்கு வந்த மஹாலக்ஷ்மின்னு சொல்றது தப்பே இல்லை, இந்த பக்கம் நின்னு பார்த்தால், உன் முகத்தில் தனிக் களையே தெரியுது..." என்றான் காதலுடன்!

  

"ஓஹோ! அப்போ இந்த பக்கம் நின்னு பார்த்தால் என்ன தெரியுது???"

  

"சொல்லவா? சொன்னால் உனக்கு கோபம் பிளஸ் வெட்கம் கலந்து வரும் பரவாயில்லையா?"

  

கணவனின் சீண்டலில் சிவந்த முகத்தை மறைக்க முயன்றவாறு,

  

"சரி சரி... வாங்க போகலாம்..." என்று சொல்லிக் கொண்டே எழுந்திருக்க முயன்றவளை, கரம் பற்றி தடுத்து,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.