அவள் சிரிப்பதை ஆவலுடன் பார்த்து விட்டு,
"இதுக்கும் மேல இங்கே இருந்தால், இன்னைக்கு நான் ஆஃபீஸ் போன மாதிரி தான்... வா போகலாம்... அப்புறம் வீணா, இந்து மட்டும் இல்லை மத்த எல்லா ஃபிரெட்ன்ட்ஸோடும் பகல் நேரத்திலேயே பேசி முடிச்சுடு...." என்றான் ராஜீவ் தன் வழக்கமான கண் சிமிட்டலுடன்.
*****
ராஜீவ் கீதா இருவரும் மாடியில் இருந்து இறங்கி வந்தப் போது காஞ்சனா அன்றைய நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தார்.
"சாப்பிட்டீங்களா, அத்தை?"
கேட்டப்படி வேகமாக படியில் இருந்து இறங்கி வந்த மருமகளை கண்டவர் கேலியாய் சிரித்தார்...
"இல்லை... எப்போதும் போல் உன்னோட சாப்பிடலாம்னு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்... அது இருக்கட்டும்... ஏன் கீதா... கல்யாணமாகி கிட்ட தட்ட ரெண்டு வருஷம் ஆன பின்னாடியும் நீங்க ரெண்டு பேரும் இப்படி ஹனிமூன் கப்பிலா இருக்கிறது சந்தோஷம் தான்... ஆனால் எனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பெத்து கொடுத்துட்டா நான் உங்களை தொந்தரவு செய்யாமல் இருப்பேன் தானே? "
காஞ்சனாவின் கிண்டலில் முகம் சிவந்த போதும், அவரின் கேள்விக்கு பதில் தேடுபவளாக கணவனை ரகசியமாகப் பார்த்தாள் கீதா. அவளுக்கும் குழந்தை ஆசை இருக்க தான் செய்தது... ஆனால் ராஜீவ் தான் தள்ளிப் போட்டு கொண்டிருந்தான். மனைவியின் பார்வைக்கான காரணம் புரிந்தவனாய்,
"நீங்க சொல்லிட்டீங்களே ம்மா... எங்க அடுத்த wedding anniversary முன்னாடி உங்க கையிலே பேரனோ பேத்தியோ இருக்கிற மாதிரி அரேன்ஜ் பண்ணிட்டா போச்சு.... " என்று அம்மாவிடம் சீரியசாக சொன்னவன், அப்படியே மனைவி பக்கம் ஒரு பார்வை பார்த்து கண் சிமிட்டவும்