(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

செய்தான்...

   

கீதாவின் முகத்தில் வந்த வெட்க சாயலை ரசித்துக் கொண்டே,

  

"ரொம்ப லேட் ஆயிடுச்சு... வாங்க நாம சாப்பிடலாம்..." என்று இருவரையும் அழைத்தான் ராஜீவ்!

  

கீதாவும் கவனத்தை காஞ்சனா பக்கம் திருப்பினாள்.

   

"அத்தை, நீங்க ஏன் வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க? கலா கிட்ட சொன்னேனே... சரி சஞ்சீவ் எங்கே.. அவரையும் கூப்பிடலாம்..." என்றாள் கீதா.

  

"கலா சொன்னா, கீதா. நான் தான் பரவாயில்லைன்னு சொன்னேன். இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் தான் லேட். சஞ்சீவ் எப்பவோ சாப்பிட்டு கிளம்பிட்டான்... இந்துவோட அம்மா கிட்ட அந்த ஜாதகத்தை கொடுத்துட்டு அப்படியே ஹாஸ்பிட்டல் போக போறேன்னு சொன்னான்... சரி வாங்க நாம சாப்பிடலாம்..." என்ற காஞ்சனா உணவறை நோக்கி செல்ல...

  

ராஜீவும் கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்!!!

  

****

   

ந்துவிற்கு அன்றைய நாள் மிக இனிமையாக இருப்பதாக தோன்றியது. அன்று காலை அவள் கண் விழித்ததே அவளின் கைப்பேசியின் சிணுங்கலில் தான். எடுத்துப் பார்த்தால், சஞ்சீவ் அவளுக்கு காலை வாழ்த்துக்கள் மெசேஜ் அனுப்பி இருந்தான். அதை படித்த உடனேயே எதனாலோ அன்றைய நாள் மிக மிக சிறப்பாக தொடங்கி இருப்பதாக அவளுக்கு தோன்றியது. சஞ்சீவுக்கு நன்றி சொல்லி, தன் வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாமா என ஒரு கணம் நினைத்தவள், மறு கணம் தயங்கினாள்... சரி, உடனே அனுப்ப வேண்டாம், சிறிது நேரம் கழித்துப் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தாள்.

   

வழக்கம் போல் யோகாவும், நடை பயிற்சியும் முடித்து விட்டு, தோட்டத்தில் உலாவி விட்டு, அர்ச்சனாவுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு உண்டாள் இந்து.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.