(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

அர்ச்சனாவின் விழிகள் அவ்வப்போது இந்துவின் பக்கம் வந்துப் போனது...

   

இந்து வாய் திறந்து எதுவும் சொல்லாத போதும், மகளிடம் ஏதோ மாற்றம் இருப்பதாகவே அர்ச்சனாவிற்கு தோன்றியது. சில மாதங்களாய் காணாமல் போயிருந்த முக மலர்ச்சி அவளிடம் மீண்டும் வருவதாக அவருக்கு தோன்றியது. சில, பல நிமிடங்களுக்கு பிறகே அர்ச்சனாவின் கண்கள் யோசனையுடன் தன் பக்கம் வந்து போவதை கவனித்த இந்து,

  

"என்ன அம்மா? அப்படி பார்க்கிறீங்க? என்ன விஷயம்?" என்றாள் ஆச்சர்யத்துடன்.

  

"ஒன்னுமில்லைடா, ஆஃபீஸ்ல ஏதாவது பெரிய டீல் சைன் ஆகி இருக்கா என்ன?"

  

"அப்படி எதுவும் புதுசா இல்லையே, அம்மா... இருந்தால் உங்க கிட்ட தானே முதல்ல சொல்லுவேன்...."

  

வேறு என்ன விஷயமாக இருக்கும் என அர்ச்சனா சிந்திக்கும் போதே,

  

"ஏன்மா கேக்குறீங்க?" என இந்துவே கேட்டாள்!

  

"ஒன்னும் இல்லைடா... சும்மா தான்...." என்றார் அர்ச்சனா!

  

"சரிம்மா... அப்போ நான் போய் ரெடி ஆக போறேன்... நீங்க கிளம்பலையா?"

  

"நானும் கிளம்பனும் தான்... இன்னைக்கு கொஞ்சம் லேட்டா போகலாம்ன்னு இருக்கேன்...."

  

"சரிம்மா... நான் போறேன்..." என்று கிளம்பியவளை ஆச்சர்யமாக பார்த்தாள் அர்ச்சனா.

  

சரவணனின் மறைவுக்குப் பின், அர்ச்சனா முகத்தில் சிறு மாறுதலோ, கேள்வியோ இருந்தாலும் கூட என்ன ஏது என்று கேட்டு துளைத்து எடுத்து விடுவாள் இந்து. அப்படி பட்டவள், இன்று ஒரு வார்த்தையும் கேட்காது செல்வதை பற்றி யோசித்துக் கொண்டே,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.