கண்டுக்காமல் இருந்தேன்னு? இந்த ஒன் ப்ளஸ் இயர்ல உன் நினைவு இல்லாமல் ஒரு வினாடி கூட போனதில்லை... நான் நேரா உன்னைப் பார்த்தால் உனக்குப் பிடிக்காது... உன்னை பார்க்காமல் என்னால் இருக்கவும் முடியாது... அது தான் அய்யா தினமும் சன் கிளாஸோட காலேஜுல தரிசனம் கொடுத்ததின் ரகசியம்... இதில் எக்ஸ்ட்ரா பயன் என்னன்னா, சாதாரணமா உன்னை ஒரு சில செகண்ட்ஸ் தான் பார்க்க முடியும், சன் கிளாஸ் இருக்கும் போது, பார்த்துட்டே இருக்கலாம்... நீ சாரி கட்டும் நளினம் இருக்கே சூப்பர் சூப்பர்...”
பேசியப்படி பாரதியை இறுக அணைத்துக் கொண்ட விவேக், அவன் மார்பில் முகத்தை புதைத்திருந்தவளின் முகத்தை நிமிர்த்தி மெதுவாக கன்னத்தில் முத்தமிட்டான். அவன் கைகளில் இருந்தப் படி, மயக்கத்துடன் அவனையே பார்த்திருந்த அவள் கண்களை பார்த்தவன், தன் வசம் இழந்தான். அவசரமாக அவள் முகம் நோக்கி குனிந்தான்.
ஒன்றரை வருடமாக மனதில் தேக்கி வைத்திருந்த காதலை வார்த்தைகளால் மட்டும் அல்லாமல் செயல்களாலும் வெளியிட கிடைத்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொண்டான் விவேக். பாரதியின் மெல்லிய வளை ஓசையும், கொலுசின் ஓசையும், பின்னணி இசையைக் கொடுக்க, அவர்களின் காதல் பயணம் இருவரின் ஒன்றுபட்ட இதயங்களுடன் அடுத்த நிலையை அடைந்தது!
🌼🌸❀✿🌷
கண்களை மூடியப் படி அவன் தோளில் படுத்திருந்த பாரதியை மையலுடன் நோக்கிய விவேக்,
“ரதி, தூங்கிட்டீயா?” எனக் கேட்டான்.
“ஹுஹும்... ஆனால் தூக்கம் வருது...” என்றாள் பாரதி...
“வரும் வரும்...” என்றபடி செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளியவன்,
“கொஞ்சம் நேரம் தூக்கத்தை ஒத்தி வைக்க முடியும்னா வா, உனக்கு நான் வாங்கி